நான் அப்பவே சொன்னேன்… இந்திய ரசிகர்களை சீண்டி இங்கிலாந்து வீரர் போட்ட அதிரடி டிவிட்!

இந்திய கிரிக்கெட் வீரர்கள் முன்னதாக ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி விட்டு வெற்றிக் கோப்பையுடன் தாயகம் திரும்பினர். இந்த வெற்றியை இந்தியா நாடாளுமன்றம் உட்பட அனைவரும் வரவேற்று பாராட்டுகளைத் தெரிவித்தனர். ஆனால் இந்த வெற்றிக் குறித்து, இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான பீட்டர்சன் போதும் நிறைய கொண்டாட வேண்டாம்… என்று நக்கலாக கூறி இருந்தார்.

தற்போது இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 227 ரன்கள் வித்தியாசத்தில் படு தோல்வியைச் சந்தித்து இருக்கிறது. இந்நிலையில் இங்கிலாந்து முன்னாள் வீரர் பீட்டர்சன், இதற்குத்தான் நான் அப்பவே சொன்னேன்… என மீண்டும் தன்னுடைய டிவிட்டரில் கருத்து பதிவிட்டு இந்திய ரசிகர்ளை சீண்டி உள்ளார். பீட்டர்சன் தன்னுடைய டிவிட்டர் பதிவில், “ஆஸ்திரேலியாவை அந்த நாட்டில் தோற்கடித்தபோது நிறைய கொண்டாட வேண்டாம் என நான் எச்சரிக்கை விடுத்தது நினைவில் இருக்கிறதா இந்தியா” என்று நக்கலாக பதிவிட்டு உள்ளார்.

இந்தப் பதிவு இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் குல்தீப் யாதவ் மற்றும் சிராஜ் இடம் பெறாதது குறித்தும் சில ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்நிலையில் அக்சர் படேலுக்கு பதிலாக களம் இறக்கப்பட்ட சபாஷ் நதீம் அணியில் இருந்து விலக்கப்படுவார் என்றும் மீண்டும் அக்சர் படேல் அணியில் இடம்பெற வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

More News

சசிகலா ராஜமாதாவா? கிழித்தெடுத்த ஜெயலலிதாவின் தோழி!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா சிறையில் இருந்து விடுதலை ஆனது குறித்தும், பெங்களூரிலிருந்து சென்னை வந்தது குறித்துமான செய்திகளை ஊடகங்கள் பெரிதுபடுத்தி வெளியிட்டு

பள்ளி நண்பர்களுடன் இணையும் இயக்குனர் வசந்தபாலன்: புதிய பட அறிவிப்பு!

தமிழ் திரையுலகின் பிரபல இயக்குனர் வசந்தபாலன் 'ஆல்பம்' என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதன் பின்னர் அவர் இயக்கிய 'வெயில்' என்ற திரைப்படம் தேசிய விருதை பெற்றது

மியான்மரில் இராணுவ ஆதிக்கம்.. பெண்ணின் தலையில் பாய்ந்த குண்டு!

மியான்மரில் தற்போது இராணுவம் ஆட்சியை கைப்பற்றி உள்ளது. இதனால் ஆங் சாங் சூகி உட்பட அந்நாட்டின் பல முக்கிய அரசியல் தலைவர்கள் பலரும் கைது செய்யப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு உள்ளனர்.

ஜெயலலிதா இல்லம் அருகே தனுஷின் புதிய வீடு: பூமி பூஜையில் ரஜினி!

ஜெயலலிதா இல்லம் அருகே தனுஷ் கட்ட உள்ள புதிய வீட்டிற்கான பூமி பூஜை இன்று நடந்த நிலையில் இந்த பூமி பூஜையில் ரஜினிகாந்த் கலந்து கொண்ட புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன.

சொந்த வீடு, மகளுக்கு அரசு வேலை: 'பரியேறும் பெருமாள்' நடிகருக்கு கலெக்டர் செய்த உதவி!

இயக்குனர் பா ரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான திரைப்படம் 'பரியேறும் பெருமாள்'. கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது