வாகனத்தை பறிமுதல் செய்த போலீஸ்: மனமுடைந்து தீக்குளித்த இளைஞர் பரிதாப பலி!

  • IndiaGlitz, [Tuesday,April 21 2020]

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா அச்சம் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது ஊரடங்கு உத்தரவுகள் மிகக்கடுமையாக கடைபிடிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து தேவையில்லாமல் வாகனங்களில் சுற்றுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அதோடு அவர்களது வாகனங்களும் பறிமுதல் செய்யப்படும் என்றும் போலீசார் எச்சரித்துள்ளனர்.

இந்த நிலையில் கேரள மாநிலத்தில் உள்ள இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே சூரியநெல்லி என்ற பகுதியில் போலீசார் ஊரடங்கு உத்தரவு பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியே விஜயகுமார் என்ற 24 வயது வாலிபர் இருசக்கர வாகனத்தில் வந்தபோது அவரை மறித்து அவரை போலீஸார் விசாரணை செய்தனர். அவர் எந்தவிதமான காரணமும் இன்றி வெளியே வந்ததாக தெரியவந்தது. இதனையடுத்து அவருக்கு வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

வாகனத்தை பறிமுதல் செய்தால் அதிர்ச்சி அடைந்த அந்த வாலிபர் உடனடியாக தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதனையடுத்து அதிர்ச்சி அடைந்த போலீசார்களும், அக்கம்பக்கத்தில் உள்ளவர்களும் அந்த இளைஞரை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். இருப்பினும் 75 சதவீதத்தை காயத்துடன் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். இதுகுறித்து போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர். வாகனத்தை பறிமுதல் செய்ததால் மனமுடைந்து இளைஞர் ஒருவர் தீக்குளித்த உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

More News

'தல' புகழை பாட்டாக பாடிய பிராவோ

Bravo's sings his next song and it's on Dhoni

ஜிவி பிரகாஷ்-சைந்தவி ஜோடிக்கு கிடைத்த 'பெற்றோர்' புரமோஷன்

பிரபல இசையமைப்பாளரும் நடிகருமான ஜிவி பிரகாஷ், பாடகி சைந்தவியை கடந்த 2013ஆம் ஆண்டு திருமணம் செய்தார். இருவரும் பள்ளி காலத்தில் இருந்தே பழகியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது

தல அஜித் ஸ்டைலில் பைக் ரேஸில் ஈடுபடும் விஜய் நாயகி

பைக் ரேஸ் என்றாலே கோலிவுட் சினிமா ரசிகர்களுக்கு தல அஜித் தான் ஞாபகம் வரும். அந்த அளவுக்கு பைக்கையும் தல அஜித்தையும் பிரிக்க முடியாது. இந்த நிலையில் தல அஜித் ஸ்டைலில் விஜய்யின் 'மாஸ்டர்'

இறுதி மரியாதையை தடுப்பது அரக்க குணம்: கமல்ஹாசன்

சமீபத்தில் ஆந்திராவைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததை அடுத்து அவருடைய உடலை அடக்கம் செய்ய அம்பத்தூர் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்

அதை மட்டும் கண்ட்ரோல் செய்தால் ஒரு லட்சம் டாலர் பரிசு: வேற லெவல் பிக்பாஸ்

இந்தியாவில் பிக்பாஸ் நிகழ்ச்சி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது போல் தற்போது ஹாலிவுட்டில் வயது வந்தவர்களுக்கான ஒரு பிக்பாஸ் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது