இந்த வேலை எல்லாம் எங்களிடம் எடுபடாது: மம்முட்டி, கமல், விஜய் குறித்து கேரள அமைச்சர்..!

  • IndiaGlitz, [Wednesday,May 15 2024]

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் மம்முட்டி நடித்த திரைப்படம் திடீரென தற்போது சர்ச்சைக்கு உள்ளாகிய நிலையில் மம்முட்டிக்கு ஆதரவாக கேரள அமைச்சர் ’இந்த வேலை எல்லாம் எங்களிடம் எடுபடாது’ என்று பதிவு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2022 ஆம் ஆண்டு மம்முட்டி நடித்த ’பழு’ என்ற திரைப்படத்தில் பிராமண சமூகத்தை சேர்ந்த ஒரு கேரக்டரில் அவர் நடித்திருப்பார் என்பதும் அவரது சகோதரி தலித் சமூகத்தை சேர்ந்த இளைஞரை காதலித்து திருமணம் செய்திருந்த நிலையில், சாதிய மனநிலையிலிருந்து வெளியே வர முடியாமலும், அதே நேரத்தில் தங்கையின் திருமணத்தை ஏற்றுக் கொள்ள முடியாமலும் ஒரு கேரக்டரில் நடித்திருப்பார். ஒரு கட்டத்தில் அவர் தனது தங்கை கணவரை கொலை செய்து சாதிய ஆதிக்க மனநிலையை நிலைப்படுத்தி இருப்பதாக அந்த படம் முடிக்கப்பட்டிருக்கும்.

இந்த படம் வெளியாகி இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் தற்போது திடீரென இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்த மம்முட்டி ஒரு குறிப்பிட்ட சமூகத்தை இழிவுபடுத்தி விட்டதாக கூறி சமூக வலைதளத்தில் அவருக்கு எதிரான ஹேஷ்டேக் பரவி வருகிறது.

இந்த நிலையில் மம்முட்டிக்கு ஆதரவாக பலரும் தங்களது கருத்தை தெரிவித்து வரும் நிலையில் கேரள மாநில கல்வி மற்றும் தொழிலாளர் துறை அமைச்சர் வாசுதேவன் குட்டி தனது சமூக வலைத்தளத்தில் மம்முட்டிக்கு ஆதரவாக தெரிவித்துள்ளார். மம்முட்டியை முகமது குட்டி என்றும், கமல்ஹாசனை கமாலுதீன் என்றும், விஜய்யை ஜோசப் விஜய் என்றும் சிலர் அழைக்கின்றனர், இதுதான் மதவாதிகளின் அரசியல், இது கேரளா மண், முற்றிலும் வேறுபட்டது, அவர்களுடைய மதவாத அரசியலுக்கு இங்கு இடம் இல்லை’ என்று பதிவு செய்துள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

More News

'உயிர் தமிழுக்கு' படத்திற்கு கிடைத்த வரவேற்பு.. இயக்குனர் அமீர் வெளியிட்ட அறிக்கை..!

அமீர் நடிப்பில் ஆதம்பாவா இயக்கத்தில் சமீபத்தில் வெளியான 'உயிர் தமிழுக்கு' என்ற திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது என்றும் ஓரளவு சுமாரான வசூல் செய்தது என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

எதிர்பார்த்தது நடந்துவிட்டது.. 'சூர்யா 44' படத்தின் மாஸ் அறிவிப்பை வெளியிட்ட கார்த்திக் சுப்புராஜ்..!

சூர்யா நடிப்பில், கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாக இருக்கும் 'சூர்யா 44' படத்தின் அறிவிப்பு கடந்த சில நாட்களுக்கு முன் வெளியான நிலையில் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று

இந்தியா - பப்புவா நியூ கினியா இணையும் படத்தை தயாரிக்கும் பா ரஞ்சித்.. டைட்டில் -ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ்..!

முதல் முறையாக இந்தியா மற்றும் பப்புவா நியூ கினியா ஆகிய இரு நாடுகளின் திரையுலகில் இணையும் படத்தை பா ரஞ்சித் தயாரிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதோடு இந்த படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக்

சூர்யா படம் டிராப்.. 2 முன்னணி நடிகர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய சுதா கொங்கரா?

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாக இருந்தால் 'புறநானூறு' திரைப்படம் கிட்டதட்ட டிராப் ஆகிவிட்டதாக கூறப்படும் நிலையில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகும்

ஒரே நாளில் 2 படங்கள் அறிவிப்பு.. இரண்டும் சொந்த படங்கள்: ராகவா லாரன்ஸ்

நடிகர், நடன இயக்குனர் மற்றும் இயக்குனர் ராகவா லாரன்ஸ் நாளை இரண்டு புதிய படங்களின் அறிவிப்பை வெளியிட போவதாகவும் இரண்டுமே அவரது சொந்த தயாரிப்பு என்றும் அறிவித்துள்ளதை அடுத்து