2 நாட்களாக மலையிடுக்கில் சிக்கிய இளைஞர்: ராணுவம் உதவ வேண்டுமென முதல்வர் கோரிக்கை!

இரண்டு நாட்களாக செங்குத்தான மலை இடுக்கில் சிக்கிக் கொண்ட இளைஞரை காப்பாற்ற ராணுவ உதவி செய்ய வேண்டும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.

கேரள மாநிலம் ஆலப்புழா என்ற பகுதியில் உள்ள செங்குத்தான மலையில் பாபு என்பவர் தனது நண்பர்களுடன் கடந்த திங்கட்கிழமை மலையேற்றத்தில் ஈடுபட்டார். அப்போது எதிர்பாராத வகையில் கால் இடரி மலையிலிருந்து உருண்டு விழுந்த அவர், மலையிடுக்கில் சிக்கிக் கொண்டதாக தெரிகிறது.

இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், தீயணைப்பு படையினர் மற்றும் தேசிய மீட்பு படையினர் அந்த இளைஞரை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அவர்கள் எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வி அடைந்தன. இதனை அடுத்து ஹெலிகாப்டர் மூலம் அந்த இளைஞரை மீட்க கடலோர காவல் படை எடுத்த முயற்சியும் தோல்வி அடைந்தது.

இந்த நிலையில் படுகாயத்துடன் மலை இடுக்கில் கடந்த இரண்டு நாட்களாக சிக்கி இருக்கும் இளைஞரை மீட்க இந்திய ராணுவம் உதவி செய்ய வேண்டும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் தனது டுவிட்டரில் கோரிக்கை விடுத்துள்ளார். இதனையடுத்து விரைவில் இந்திய ராணுவம் கேரளாவுக்கு விரைந்து அந்த இளைஞரை மீட்கும் நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

படு ஒல்லியாக மாறிய இசையமைப்பாளர் தமன்… வேறலெவல் டிரான்ஸ்பர்மேஷன் புகைப்படம்!

தமிழ், தெலுங்கு சினிமாவில் பிரபல இசையமைப்பாளராக அறியப்படும் தமன் சமீப ஆண்டுகளில் 135 கிலோ எடையுடன் வலம்வந்தார்.

கர்ப்ப காலத்தில் பெண்களின் உடல்: கேலி செய்தவர்களுக்கு பதிலடி கொடுத்த காஜல் அகர்வால்

பிரபல நடிகை காஜல் அகர்வால் தற்போது கர்ப்பமாக இருக்கும் நிலையில் அவரது உடல்வாகு குறித்து சில நெட்டிசன்கள் கேலியும் கிண்டலும் செய்து வருவதை அடுத்து அவர் பதிலடி கொடுக்கும் வகையில் நீண்ட பதிவை

கோரிக்கையை நிறைவேற்றிய முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி கூறிய நடிகை!

தனது கோரிக்கையை நிறைவேற்றிய தமிழக முதல்வர் முக ஸ்டாலினுக்கு நன்றி கூறி நடிகை அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

ஒரே நாளில் ரஜினி, விஜய் படங்களின் அப்டேட்:  இன்ப அதிர்ச்சி கொடுக்க போகிறதா சன்பிக்சர்ஸ்?

நாளை அதாவது பிப்ரவரி 10ஆம் தேதி ரஜினிகாந்த் மற்றும் விஜய் படங்களின் அப்டேட்டை சன் பிக்சர்ஸ் நிறுவனம் கொடுக்க இருப்பதாக தகவல் கசிந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

ஜெயம் ரவியின் அடுத்த படத்தின் டைட்டில் இதுவா? 

ஜெயம் ரவி நடித்த 'பூமி'  திரைப்படம் கடந்த ஆண்டு வெளியான நிலையில் தற்போது அவர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'பொன்னியின் செல்வன்' என்ற திரைப்படத்தில் நடித்துக் முடித்துள்ளார்