மோடியை பதவியில் இருந்து இறக்க அரை மொட்டை மனிதர் செய்த சபதம்

  • IndiaGlitz, [Tuesday,November 29 2016]

பாரத பிரதமர் நரேந்திர மோடியின் ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற அறிவிப்புக்கு பின்னர் இந்தியாவில் பல்வேறு விநோத சம்பவங்களும், சோக சம்பவங்களும் நடந்து வருகின்றன. பிரதமரின் முடிவை பெரும்பாலானோர் ஆதரித்தாலும் எதிர்ப்பு தெரிவிப்பவர்களின் அணுகுமுறைகள் வித்தியாசமாக உள்ளதை அவ்வப்போது வெளிவரும் செய்திகள் மூலம் பார்த்து வருகிறோம்
இந்நிலையில் கேரளாவை சேர்ந்த ரூபாய் நோட்டுக்கள் விவகாரத்தால் பாதிக்கப்பட்ட ஒருவர் தன்னுடைய தலைமுடியின் ஒரு பகுதியை மட்டும் ஷேவ் செய்து எடுத்து அரை மொட்டை மனிதராக காட்சி அளிக்கின்றார்.
சாமானிய மக்களை வாட்டி வதைக்கும் அறிவிப்பை வெளியிட்ட மோடி பதவி இறங்கிய பின்னர்தான் முழு தலையிலும் முடியை வளர்ப்பேன் என்று அவர் சபதம் செய்துள்ளார். துரியோதன் சாகும் வரை தன்னுடைய தலைமுடியை முடிய மாட்டேன் என்று திரெளபதி செய்த சபதத்திற்கு இணையானது இவருடைய வித்தியாசமான சபதம் என்று சமூக வலைத்தளங்களில் பலர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

More News

இதுவரை வாரம் ரூ.24,000. இனிமேல் அப்படி இல்லை. ரிசர்வ் வங்கியின் புதிய அறிவிப்பு

ரூ.500 ரூ.1000 செல்லாது என்ற அறிவிப்பு வெளிவந்தவுடன் வங்கிக்கணக்கில் உள்ள பணத்தை எடுக்கவும் ரிசர்வ் வங்கி கட்டுப்பாடு விதித்தது. அதாவது ஒருவர் தனது வங்கியில் எத்தனை கோடி இருந்தாலும் வாரத்திற்கு ரூ.24,000 மட்டுமே எடுக்க முடியும் என்பதே அந்த கட்டுப்பாடு

கமல்-மெளலியின் 'மெய்யப்பன்' செய்தி மெய்யா? பொய்யா?

உலக நாயகன் கமல்ஹாசன் தற்போது நடித்து இயக்கி வரும் 'சபாஷ் நாயுடு' படத்தை அடுத்து ஏவிஎம் நிறுவனத்தின் தயாரிப்பில் மெளலி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாக சமீபத்தில் செய்தி வெளிவந்தது.

விஜய்-அட்லி படப்பிடிப்பு தொடங்குவது எப்போது?

இளையதளபதி விஜய் நடித்த 'பைரவா' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ரசிகர்களுக்கு சிம்பு தரும் கிறிஸ்துமஸ் விருந்து

சிம்புவின் 'அச்சம் என்பது மடமையடா' திரைப்படம் சென்னை உள்பட அனைத்து பகுதிகளிலும் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து சிம்புவின் அடுத்த படமான 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

தமன்னாவுடன் இணையும் சுஹாசினி-ரேவதி

பிரபுதேவாவுடன் தமன்னா நடித்த 'தேவி' மூன்று மொழிகளிலும் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து தற்போது அவர் 'பாகுபலி 2'...