close
Choose your channels

விபச்சார வழக்கில் சிக்கி ஜாமினில் வெளிவந்த நடிகை மீண்டும் கைது!

Friday, July 29, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விபச்சார வழக்கில் சிக்கி கைதான பிரபல நடிகை ஒருவர் ஜாமீனில் வெளிவந்த நிலையில் தற்போது மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரபல மலையாள நடிகை அஸ்வதி என்பவர் இளம்பெண்களை வைத்து விபசாரம் செய்ததாகவும் அந்த பெண்களை போதைக்கு அடிமையாக்கியதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது. இதனையடுத்து கடந்த 2018ஆம் ஆண்டு போலீசார் அவரை கைது செய்தனர்.

இந்த நிலையில் இந்த வழக்கில் ஜாமின் பெற்று வெளியே உள்ள அஸ்வதி திடீரென மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். நடிகை அஸ்வதி சமீபத்தில் தனது காதலருடன் குடிபோதையில் கார் ஓட்டி சென்றதாக தெரிகிறது. அந்த கார் அதிவேகமாக சென்று தடுப்புச்சுவர், கார், பைக்குடன் மோதி சென்றதாக கூறப்படுகிறது.

இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சென்ற அஸ்வதி ஓட்டிச்சென்ற காரை விரட்டிப் பிடித்து அவரையும் அவரது காதலரையும் கைது செய்தனர். இருவரையும் பரிசோதனை செய்தபோது அஸ்வதி மற்றும் அவரது காதலர் இருவரும் குடிபோதையில் உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்த காவல்துறையினர் சிறையில் அடைத்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment