கையில் நெருப்பை வைத்து சர்க்கஸ் வித்தை காட்டிய கீர்த்தி பாண்டியன்!

  • IndiaGlitz, [Thursday,December 16 2021]

பிரபல நடிகரும் தயாரிப்பாளருமான அருண்பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன் தற்போது இளம் நடிகையாக தமிழ் சினிமாவில் வலம் வருகிறார். அவ்வபோது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளாமரான புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வரும் இவர் தற்போது ரசிகர்களை அசர வைக்கும் வகையில் வித்தியாசமான முயற்சி ஒன்றை செய்திருக்கிறார்.

அறிமுக இயக்குநர் ஹரிராம் இயக்கத்தில் உருவான “தும்பா“ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்தான் கீர்த்தி பாண்டியன். இந்தப் படத்தைத் தொடர்ந்து மலையாளத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற திரைப்படமான “ஹெலன்“ திரைப்படத்தின் தமிழாக்கத்தில் அவர் நடித்திருந்தார். “அன்பிற்கினியாள்“ எனப் பெயரிடப்பட்டு இருந்த இந்த திரைப்படத்தை அருண்பாண்டியனே தயாரித்து அதில் நடித்தும் இருந்தார். இந்தப் படத்தில் கீர்த்தி பாண்டியனின் நடிப்பு பல தரப்புகளில் இருந்தும் நல்ல வரவேற்பை பெற்றது.

இதையடுத்து தற்போது “கண்ணகி“ எனும் திரைப்படத்தில் அவர் நடித்து வரகிறார். இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி இருந்த நிலையில் கீர்த்தி பாண்டியன் தற்போது கையில் நெருப்பை வைத்து வித்தைக் காட்டும் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார்.

ஏற்கனவே சோஷியல் மீடியாவில் படு ஆக்டிவாக செயல்பட்டு வரும் கிர்த்தி அவ்வபோது தனது கிளாமரான புகைப்படங்களை அதில் வெளியிட்டு ரசிகர்களை ஆச்சர்யப்படுத்துவார். தற்போது நெருப்பை வைத்து வித்தை காட்டும் கலைஞர்களுடன் இணைந்து இவரும் வித்தை செய்ய முயற்சித்து இருக்கும் இந்த வீடியோ இணையத்தில் படு வைரலாகி வருவதும் குறிப்பிடத்தக்கது.

More News

பட வெற்றியைத் தொடர்ந்து திருப்பதி ஏழுமலையானை தரிசித்த பிரபல நடிகர்!

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம்வரும் நடிகர் பாலகிருஷ்ணா

சர்ச்சையில் சிக்கிய பிசிசிஐ… பிரஸ்மீட் வைத்து விளக்கிய விராட் கோலி!

தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் தொடரை ஒட்டி இந்தியக் கிரிக்கெட் அணிக்குள் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டன. அதிலும்

விண்வெளியில் உடலுறவு சாத்தியமா? வைரலாகும் சர்ச்சை சந்தேகம்!

விண்வெளியில் மனிதர்கள் உடலுறவு வைத்துக் கொள்ள முடியுமா?

விஷாலின் பிரமாண்டமான பான்-இந்தியா படம்: இயக்குனர் யார் தெரியுமா?

விஷால் நடித்து வரும் 'வீரமே வாகை சூடும்' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது என்பதும் இந்த படம் அடுத்த ஆண்டு ஜனவரி 26-ஆம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது என்பதும் தெரிந்ததே.

'புஷ்பா' தமிழில் நாளை ரிலீஸ் ஆகின்றதா? படக்குழுவினர் வெளியிட்ட தகவல்!

பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடித்த 'புஷ்பா' திரைப்படம் நாளை உலகம் முழுவதும் ரிலீசாக இருக்கும் நிலையில் இந்த படம் நாளை தமிழில் ரிலீஸ் ஆகுமா என்ற கேள்வி எழுந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.