என்னை ட்ரோல் செய்தவர்களுக்கும் நன்றி: கீர்த்தி சுரேஷின் வீடியோ வைரல்..!

  • IndiaGlitz, [Thursday,November 16 2023]

நடிகை கீர்த்தி சுரேஷ் திரையுலகில் அறிமுகமாகி 10 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து அவர் அனைவருக்கும் நன்றி கூறிய நிலையில் தன்னை கேலி கிண்டல் செய்தவர்களுக்கு நன்றி என்று கூறியுள்ளார்.

நடிகை கீர்த்தி சுரேஷ் கடந்த 2013ஆம் ஆண்டு கீதாஞ்சலி என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். பிரியதர்ஷன் இயக்கத்தில் உருவான இந்த படம் வெளியாகி சரியாக பத்து வருடங்கள் நிறைவடைந்ததை அடுத்து கீர்த்தி சுரேஷ் அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

என்னுடைய அப்பா அம்மாவுக்கு முதல் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் அவர்கள் இல்லை என்றால் தான் இந்த இடத்தில் இருந்திருக்க மாட்டேன் என்றும் கூறினார். மேலும் தன்னை அறிமுகம் செய்த தனது குரு பிரியதர்ஷனுக்கு என்றும் தான் கடமைப்பட்டு இருப்பதாக கூறிய கீர்த்தி சுரேஷ் என்னுடைய திரைப்பட வாழ்க்கை தொடங்குவதற்கு அவர்தான் காரணம் என்றும் கடவுளுக்கும் எனது நன்றி என்றும் தெரிவித்தார்.

பத்து ஆண்டுகள் முடிவு அடைந்தாலும் இப்போதுதான் எனது திரைப் பயணம் தொடங்கியது போல் இருக்கிறது என்றும் இன்னும் நிறைய தூரம் பயணம் செய்ய வேண்டியது என்றும் தெரிவித்தார். மேலும் என்னுடைய படங்களின் தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், சக நடிகர்கள், மீடியா மற்றும் ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி என்றும் என்னைக் கேலி கிண்டல் செய்தவர்களுக்கு நன்றி என்றும் அவர்களுடைய விமர்சனங்கள் தான் எனது வளர்ச்சிக்கு உதவியாக இருந்தது என்றும் தெரிவித்தார்.

இது குறித்த வீடியோவை நடிகை கீர்த்தி சுரேஷ் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த வீடியோவுக்கு 6 லட்சத்துக்கும் அதிகமான லைக் குவிந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

More News

விஜய் டிவியில் மெகா தொடர்.. பரபரப்பான திருப்பங்களுடன் சகோதரிகளின் கதை 

மகாநதி எனும் விஜய் டி‌வியின் மெகா தொடர் ஜனவரி மாதம் ஒளிபரப்பாக தொடங்கியது.  இந்த கதை 4 சகோதரிகளின் கதையாக தொடங்கி இன்று வரை பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தி வருகிறது.

பூர்ணிமாவுக்கும் லவ் வந்துருச்சு.. அதுவும் இவர் மேலயா? என்ன ஒரு ஃபீலிங்..!

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் ஏற்கனவே இரண்டு காதல் ஓடிக்கொண்டிருந்த நிலையில் தற்போது மூன்றாவதாக பூர்ணிமாவுக்கும் லவ் வந்துவிட்டதாக வெளியாகி இருக்கும் வீடியோ வைரல் ஆகி வருகிறது.

பதவியில் இருந்து திடீரென விலகியது ஏன்? திருப்பூர் சுப்பிரமணியன் விளக்கம்..!

தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர் சங்கத்தின் தலைவர் பதவியை திடீரென திருப்பூர் சுப்ரமணியம் ராஜினாமா செய்த நிலையில் அது குறித்து விளக்கமும் அளித்துள்ளார். 

இயக்குனர் சேரன் வீட்டில் நிகழ்ந்த துக்கம்: திரையுலக பிரபலங்கள் இரங்கல்..!

பிரபல இயக்குனர் மற்றும் நடிகர் சேரன் வீட்டில் நிகழ்ந்த துக்கத்தை அடுத்து திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

நடிகை ராதா மகளுக்கு இன்று திருமணம்.. நேற்றே வெளியான ரொமான்ஸ் புகைப்படங்கள்..!

நடிகை ராதா மகள் கார்த்திகாவுக்கு இன்று திருமணம் நடைபெற இருக்கும் நிலையில் நேற்று அவர் தனது வருங்கால கணவருடன் எடுத்த ரொமான்ஸ் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்ட நிலையில் அவை வைரல் ஆகி வருகிறது.