வரலட்சுமியைப் பற்றி பேசுவதற்கே பயமாக இருக்கிறது: கீர்த்திசுரேஷ்

  • IndiaGlitz, [Monday,October 15 2018]

விஷால், கீர்த்திசுரேஷ், வரலட்சுமி நடித்த 'சண்டக்கோழி 2' திரைப்படம் வரும் 18ஆம் தேதி வெளிவரவுள்ள நிலையில் இந்த படத்தில் நடித்த அனுபவங்கள் குறித்து கீர்த்திசுரேஷ் பகிர்ந்து கொண்டார். அவர் கூறியதாவது:

'சண்டைக்கோழி 2' படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தபோது தயக்கத்துடன் தான் வந்தேன். ஆனால் இப்பொழுது கொஞ்சம் நம்பிக்கை வந்திருக்கிறது. ஏனென்றால், முதல் பகுதியில் மீரா ஜாஸ்மின் சிறப்பாக நடித்திருப்பார். அந்த கதாபாத்திரத்திற்கு ஈடுகொடுத்து நடிக்க வேண்டும். இயக்குநர் லிங்குசாமி கதைக் கூறும்போதே நடித்தும் காட்டுவார். கதாநாயகிக்கு நடிக்கும் வாய்ப்பு ஒரு சில படங்களில் மட்டுமே அமையும். இந்த படத்தில் அப்படியொரு வாய்ப்பை இயக்குநர் லிங்குசாமி ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார்.

ராஜ்கிரணுடன் ரஜினிமுருகனில் நடித்திருக்கிறேன். ஆனால் இருவருக்கும் அவ்வளவாக காட்சிகள் இல்லை. இந்தப் படத்தில் ஒரே ஒரு கட்சியென்றாலும் நச்சென்று இருக்கும்.

வரலட்சுமியைப் பற்றி பேசுவதற்கே பயமாக இருக்கிறது. அந்தளவு நடிப்பில் மிரட்டியிருக்கிறார். மதுரை தமிழை எப்படி பேச வேண்டுமென்று பிருந்தா சாரதி கற்றுக் கொடுத்தார். முதல் இரண்டு மூன்று நாட்கள் உடல் மொழியுடன் பேசி நடிக்க சிரமம் இருந்தாலும், என்னால் முடிந்த அளவு முயற்சி செய்திருக்கிறேன்.

தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலும் டப்பிங் பேசியிருக்கிறேன். யுவன் ஷங்கர் ராஜாவுடன் முதல் படம். இப்படத்தில் இடம்பெறும் ‘கம்பத்து பொண்ணு’ பாடல் என்னுடைய அபிமானப் பாடல். என்னுடன் நடித்த நடிகர், நடிகைகள் மற்றும் அனைத்துத் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் நன்றி. விஷாலின் 25வது படத்தில் எனக்கு வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி.

More News

வைரமுத்து பெரிய மனிதாரா? திலகவதி ஐபிஎஸ் ஆவேசம்

வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டு கூறிய சின்மயி விரைவில் இதுகுறித்து புகார் அளிக்க வேண்டும் என்றும் வைரமுத்துவை விரைவில் விசாரணை செய்ய வேண்டும்

கமல்ஹாசன் மாய உலகில் இருக்கிறார்: தமிழிசை செளந்திரராஜன்

முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா, கருணாநிதி ஆகிய இரு ஆளுமை நிறைந்த தலைவர்கள் மறைந்த நிலையில் மிக எளிதில் முதல்வர் பதவியை பிடித்துவிடலாம்

'சர்கார்' படத்திற்கு மீண்டும் புரமோஷன் செய்யும் தமிழிசை?

'சர்கார்' படத்தின் டைட்டில் குறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் தனது கமெண்ட்டை சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

படப்பிடிப்பின்போது பாலியல் தொல்லை: நடிகர் சண்முகராஜன் மீது பிரபல நடிகை புகார்

கடந்த சில மாதங்களாக நடிகைகள் உள்பட திரையுலகினர் தங்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லைகளை தைரியமாக வெளியே கூறி வருகின்றனர்.

'தேவர் மகன் 2' சாதியை எதிர்க்கும் படமா? கமல் பதில்

'தேவர்மகன்2' அனைத்து சாதியினருக்கும் எதிரான படம்”என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.