5 ஆண்டுகளுக்கு பின் சூர்யாவுடன் மீண்டும் இணையும் பிரபல நடிகை!

  • IndiaGlitz, [Saturday,November 20 2021]

5 ஆண்டுகளுக்குப் பின் சூர்யாவுடன் மீண்டும் பிரபல நடிகை ஒருவர் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சூர்யா நடித்த ’ஜெய்பீம்’ திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் அவரது அடுத்த படமான ’எதற்கும் துணிந்தவன்’ என்ற திரைப்படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி 4-ஆம் தேதி வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தேசிய விருது பெற்ற இயக்குனர் பாலாவின் இயக்கத்தில் சூர்யா நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தின் பணிகள் ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் இந்த படத்தின் நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு சூர்யாவுடன் ’தானா சேர்ந்த கூட்டம்’ என்ற திரைப்படத்தில் நடித்த கீர்த்தி சுரேஷ், ஐந்து ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் சூர்யாவுடன் இணைய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான ரஜினியின் ‘அண்ணாத்த’ திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. அதுதவிர மோகன்லாலுடன் ‘மரைக்கார்’ மகேஷ்பாபுவுடன் ’சர்க்காரு வாரி பாட்டா’ செல்வராகவனுடன் ’சாணிக்காகிதம்’, சிரஞ்சீவியுடன் ‘போலோ சங்கர் ஆகிய படங்களிலும் கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

மத்திய அரசின் முடிவு மகிழ்ச்சி அளிக்கிறது: சூர்யா டுவிட்

மத்திய அரசு இன்று புதிய வேளாண்மை சட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்ததை அடுத்து இந்த முடிவு தனக்கு மகிழ்ச்சியளிப்பதாக சூர்யா சற்றுமுன் ட்விட் செய்துள்ளார் 

இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுபவர் இவர்தான்!

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த ஒன்றரை மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் ஒவ்வொரு வாரமும் நாமினேட் செய்யப்பட்டவர்களில் குறைந்த வாக்குகள் பெற்றவர்கள் ஞாயிறு அன்று வெளியேற்றப்படுவார்கள்

சிம்புவின் 'மாநாடு' படத்தின் சென்சார் மற்றும் ரன்னிங் டைம் தகவல்கள்!

சிம்பு நடித்த 'மாநாடு' திரைப்படம் வரும் 25ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாக உள்ளது என்பதும், இந்த படத்தின் புரமோஷன் பணிகள் கடந்த சில நாட்களாக

சூர்யா படத்தில் சிவகார்த்திகேயன்: ரசிகர்கள் உற்சாகம்!

சூர்யாவின் படத்தில் சிவகார்த்திகேயன் இணைந்து உள்ளதை அடுத்து இரு தரப்பு ரசிகர்களும் உற்சாகத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மன்னிப்பு கேட்டால் ஒரு லட்சம் மணியார்டர்: சூர்யாவுக்கு பாமக பிரமுகர் அறிவிப்பு!

'ஜெய்பீம்' திரைப்படத்தில் வன்னியர்களை இழிவுபடுத்தும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டதற்கு வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்டால் சூர்யாவுக்கு ஒரு லட்ச ரூபாய் மணியார்டர் அனுப்பப்படும்