8 வருடத்திற்கு முன் எப்படி இருந்திங்க.. இப்ப எப்படி இருக்கீங்க.. கீர்த்தி சுரேஷின் எமோஷனல் பதிவு..!

  • IndiaGlitz, [Wednesday,June 19 2024]

நடிகை கீர்த்தி சுரேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எட்டு வருடங்களுக்கு முன் உங்களை நான் பார்த்ததற்கும் இப்போது பார்ப்பதற்கும் அதிக வித்தியாசம் இருக்கிறது என்றும் உங்கள் வளர்ச்சியை பார்த்து நான் பெருமையுடன் மகிழ்ச்சி அடைகிறேன் என்றும் எமோஷனலாக பதிவு செய்துள்ளார்.

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ் என்பதும் தற்போது கூட அவர் இரண்டு தமிழ் படங்கள் உள்பட 3 படங்களில் நடித்து வருகிறார் என்பதும் தெரிந்தது. குறிப்பாக விஜய் நடித்த ’தெறி’ படத்தின் இந்தி ரீமேக் திரைப்படமான ’பேபி ஜான்’ திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள நிலையில் இந்த படம் வெற்றி பெற்றால் அவருக்கு பாலிவுட்டிலும் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் விஜய்யின் மேனேஜர் மற்றும் தயாரிப்பாளர் ஜெகதீஷ் குறித்து கீர்த்தி சுரேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எமோஷனலாக பதிவு செய்துள்ளார். அந்த பதிவில் ’எட்டு வருடங்களுக்கு முன் உங்களை தயாரிப்பாளராக, ஒரு தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளராக பார்த்தேன். ஆனால் இந்த எட்டு வருடங்களில் நீங்கள் மிகப்பெரிய அளவில் வளர்ந்திருப்பதை பார்த்து பெருமை கொள்கிறேன். உங்கள் வளர்ச்சி சூப்பர். எல்லாரையும் விட உங்கள் அம்மா ரொம்ப சந்தோஷப்படுவார். நீங்கள் அவருக்கு கொடுக்கக்கூடிய சிறந்த பரிசு இதுதான்’ என்று குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவை தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

மேலும் ஜெகதீஷ் தயாரிப்பில் உருவாகி வரும் ’ரிவால்வர் ரீட்டா’ என்ற படத்தில் கீர்த்தி சுரேஷ் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படம் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

யாருக்கும் தெரியாத சிறப்பான 2 கோவில் ரகசியங்கள் | வாஞ்சிநாத சுவாமி | மதுர காளியம்மன் | மங்களாம்பிகை

ஆன்மீக சிந்தனையாளர் கிண்டி சுவாமிநாதன் சிவாச்சாரியார் அவர்கள், ஆன்மீகக்ளிட்ஸ் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், கும்பகோணம் அருகில் உள்ள மங்களாம்பிகை உடனுறை வாஞ்சிநாத சுவாமி திருக்கோவில்

விஜய் நடிப்பதை நிறுத்தினால் சினிமாவுக்கு எந்த பாதிப்பும் இருக்காது: நடிகை கஸ்தூரி

நடிகர் விஜய் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய நிலையில் அவர் இன்னும் ஒரு படம் நடித்துவிட்டு திரையுலகில் இருந்து விலகுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

திமுக எம்பி வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்த டி இமானின் முன்னாள் மனைவி.. என்ன சொல்லியிருக்கார் பாருங்க..!

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தென் சென்னை தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் அபார வெற்றி பெற்ற நிலையில் அவரது வெற்றிக்கு தனது வாழ்த்துக்களை

திடீரென காது கேட்கவில்லை.. பிரபல பாடகியின் அதிர்ச்சி இன்ஸ்டா பதிவு..!

பிரபல பாடகி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திடீரென தனக்கு காது கேட்கவில்லை என்று தெரிவித்துள்ளது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

'கங்குவா' அப்டேட்டே இல்லை.. கடுப்பில் ரசிகர் போட்ட ட்வீட்.. கண்டித்த தயாரிப்பாளர்..!

சூர்யா நடித்த 'கங்குவா' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீசுக்கு தயாராகி வரும் நிலையில் இந்த படத்தின் அப்டேட் கடந்த சில வாரங்களாக இல்லை என்பது சூர்யா ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.