ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி தங்கச்சி: தேசிய விருது பெற்ற நடிகைக்கு நன்றி கூறிய சூரி!

  • IndiaGlitz, [Thursday,August 27 2020]

பிரபல காமெடி நடிகர் சூரி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார் என்பதும் அவருக்கு திரையுலகினர், ரசிகர்கள் தொடர்ச்சியாக வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் சற்று முன்னர் தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையும், தேசிய விருது பெற்றவருமான கீர்த்தி சுரேஷ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் நடிகர் சூரிக்கு தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

‘இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சூரி அண்ணா’ என்று நடிகை கீர்த்திசுரேஷ் தெரிவித்துள்ளதற்கு நடிகர் சூரி ’ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி தங்கச்சி’ என தெரிவித்துள்ளார். சூரி மற்றும் கீர்த்தி சுரேஷின் அண்ணன் தங்கை பாசத்தை பார்த்து ரசிகர்கள் நெகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ’அண்ணாத்த’ திரைப்படத்தில் சூரி மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகிய இருவரும் அண்ணன் தங்கையாக நடித்து வருவதாகவும் அதில் இருந்து இருவரும் சமூக வலைதளங்களில் ஒருவருக்கு ஒருவர் உரையாடிக்கொள்ளும்போது அண்ணா.. தங்கச்சி.. என்று பாசமலர் போல் வலம் வருவதாகவும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
 

More News

எட்டே வாரத்தில் பேசிய குழந்தை: ஆனந்தக்கண்ணீர் விட்ட பெற்றோர்

பொதுவாக குழந்தைகள் 10 முதல் 14 மாதங்கள் கழித்தே முதல் வார்த்தையை பேசும் என்ற நிலையில் பிரிட்டனைச் சேர்ந்த குழந்தை ஒன்று பிறந்து இரண்டே மாதத்தில் 'ஹலோ' என்ற வார்த்தையை பேசியுள்ளது

டி20 போட்டிகளில் முதல் முறையாக ஒருவர் 500 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை!!!

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி வீரரான டுவெய்ன் பிராவோ டி20 போட்டிகளில் முதல் முறையாக 500 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்

நம்ம கேப்டன் விராட் கோலி வீட்டில் விஷேசம்… டிவிட்டரில் தகவல்!!!

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான விராட் கோலி தனது டிவிட்டர் பதிவில் “நாங்கள் இனிமேல் 3 பேர், ஜனவரியில் குழந்தை பிறக்க இருக்கிறது” என மகிழ்ச்சி செய்தியை தெரிவித்து இருக்கிறார்.

லண்டனில் இருந்து சென்னை வந்த பெண்: தனிமைப்படுத்தப்பட்ட ஓட்டலில் தற்கொலை

லண்டனில் இருந்து சென்னை வந்த பெண் ஒருவர் தனிமைப்படுத்தும் காலத்திற்காக சென்னை ஹோட்டலில் தங்கி இருந்த நிலையில் திடீரென அவர் தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

தியேட்டரை திறந்துவிட்டு டாஸ்மாக்கை மூடுங்க: அரசுக்கு எச்சரிக்கை விடுத்த தமிழ் நடிகர்

பிரபல தமிழ் நடிகர் ஒருவர் 'தியேட்டரை திறந்துவிட்டு டாஸ்மாக் கடைகளை மூடுங்கள்' என அரசுக்கு எச்சரிக்கை விடுத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது