குற்றாலம் அருகே கீர்த்தி சுரேஷ் மற்றும் பிரியங்கா மோகன்.. மேக்கப் இன்றி என்ன செய்றாங்க பாருங்க..!

  • IndiaGlitz, [Tuesday,April 25 2023]

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளான கீர்த்தி சுரேஷ் மற்றும் பிரியங்கா மோகன் ஆகிய இருவரும் குற்றாலம் அருகே படப்பிடிப்பில் இருக்கும் நிலையில் ஒரு ஹோட்டலில் தோசை சாப்பிடும் புகைப்படத்தை பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது வைரல் ஆகி வருகிறது.

நடிகை பிரியங்கா மோகன் தற்போது தனுஷ் நடித்து வரும் ’கேப்டன் மில்லர்’ படத்தின் படப்பிடிப்பிற்காக குற்றாலம் சென்றுள்ளார். அதேபோல் நடிகை கீர்த்தி சுரேஷ் ’ரகு தாத்தா’ என்ற படத்தின் படப்பிடிப்புக்காக குற்றாலத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கீர்த்தி சுரேஷ் மற்றும் பிரியங்கா மோகன் ஆகிய இருவரும் குற்றாலம் அருகே உள்ள ஒரு ஹோட்டலில் தோசை சாப்பிட்ட புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளனர். இருவரும் மேக்கப் இல்லாமல் இருக்கும் இந்த புகைப்படத்திற்கு ஏராளமான லைக்ஸ், கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது என்று குறிப்பிடத்தக்கது.

நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் பிரியங்கா மோகன் ஆகிய இருவரும் நெருங்கிய தோழிகள் என்பதும் பலமுறை இருவரும் இணைந்து எடுத்த புகைப்படத்தை தங்களது சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ளனர் என்பது தெரிந்ததே.

நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது ’மாமன்னன்’ என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில் ’ரகு தாத்தா’, ‘ரிவால்வர் ரீட்டா’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அதே போல் பிரியங்கா மோகன் ’கேப்டன் மில்லர்’ படத்தை அடுத்து எம் ராஜேஷ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படத்திலும் ஒரு தெலுங்கு திரைப்படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.