கருணாநிதி எழுதி வைத்த உயில் இதுதான்: வைரமுத்து

  • IndiaGlitz, [Thursday,August 09 2018]

திமுக தலைவர் கருணாநிதி நேற்று சென்னை மெரீனாவில் உள்ள அண்ணா சமாதி அருகே முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டார். இந்த நிலையில் நேற்று இரவு விடிய விடிய மட்டுமின்றி இன்று அதிகாலை முதல் திமுக தொண்டர்கள் அவரது சமாதிக்கு வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் இன்று காலை கருணாநிதியின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரான கவிஞர் வைரமுத்து கருணாநிதி சமாதிக்கு அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

கலைஞர் இல்லாத தமிழ்நாடு என்பதை நினைத்து பார்க்கவே முடியவில்லை. கலைஞர் இல்லாமல் ஒரு விடியல் தமிழ்நாட்டிற்கு எப்படி வரும்? என்று எனக்கு தோன்றவில்லை. சூரியன் இல்லாமல் ஒரு விடியல் வானத்தில் வருமா?

கலைஞருக்கு என் தந்தைக்கு செய்ய வேண்டிய இறுதிக்கடனை செலுத்துவதற்காக இங்கு வந்துள்ளேன். தமிழக மக்கள் நன்றி மிக்கவர்கள் என்று நான் நம்புகிறேன். கலைஞருடைய புகழை பாடுவதும், அவர் லட்சியங்களை முன்னெடுத்து செல்வதும், அவர் வாழ்ந்த வாழ்வில் இருந்து புதிய தலைமுறை நற்பாடங்களை பெற்று கொள்வதும் கடமை என்று நான் கருதுகிறேன். இலக்கியங்களில் அவர் வாழ்வார், சொற்பொழிவில் அவர் வாழ்வார், செயல்களால் அவர் வாழ்வார்.

அவருடைய போர்க்குணம் இன்றைய இளைய சமுதாயத்திற்கு வரவேண்டும். அவருடன் கருத்துவேறுபாடு கொண்டவர்கள் கூட அவருடைய போர்க்குணம், தீராத உழைப்பு, போராளித்தன்மை, வளையாத கொள்கை, எந்தவித கருத்துவேறுபாடு கொள்ள மாட்டார்கள். அவருடைய திடம், மன உறுதி தமிழ் சமுதாயத்திற்கு தொடர்ந்து வரவேண்டும். தமிழ் சமுதாயத்திற்கு அவர் எழுதி வைத்துள்ள மிகப்பெரிய உயிர் சுயமரியாதையும் இன அடையாளமும்தான். அவர் எழுதி வைத்த சொத்தை பாதுகாப்பது தமிழர்களின் பெருங்கடமை. வாழ்க கலைஞர் புகழ், வெல்க அவரது புகழ்' 

இவ்வாறு கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார்.

More News

கட்டுக்கடங்காத கூட்டம்: போலீஸ் தடியடியால் இரண்டு பேர் பலி

சென்னை ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதியின் உடல் இன்னும் சற்று நேரத்தில் அண்ணா சமாதியை நோக்கி ஊர்வலமாக செல்லவிருப்பதால்

அஞ்சலி செலுத்த முடியாத நிலையில் உள்ளேன்: சீயான் விக்ரம் வருத்தம்

திமுக தலைவர் கருணாநிதியின் திடீர் மறைவால் தமிழக அரசியல் தலைவர்கள் மட்டுமின்றி திரையுலகினர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அன்னாருக்கு இறுதி மரியாதை செய்யும் வகையில்

கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்திய விஜய் மனைவி

திமுக தலைவர் கருணாநிதியின் மறைவை அடுத்து அவரது உடலுக்கு ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித், சூர்யா உள்பட பல திரையுலக பிரமுகர்கள் நேரில் இன்று காலை முதல் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த முடியவில்லையே! ஷங்கர் வருத்தம்

கருணாநிதிக்கு இன்று அதிகாலை முதல் திரையுலகினர்கள் பலர் தங்களுடைய அஞ்சலியை செலுத்தி வரும் நிலையில் ஒருசிலர் வெளிநாடுகளில் இருப்பதால் அவருக்கு அஞ்சலி செலுத்த முடியாத நிலையில் உள்ளனர்

கருணாநிதி இறுதி ஊர்வலம் புறப்படும் நேரம் அறிவிப்பு

திமுக தலைவர் கருணாநிதியின் உடல் சென்னை ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டுள்ள நிலையில் லட்சக்கணக்கான தொண்டர்கள் அவருக்கு இறுதியஞ்சலி செலுத்தி வருகின்றனர்.