close
Choose your channels

நடிகை தமன்னாவிடம் மன்னிப்பு கேட்டார் இயக்குனர் சுராஜ்

Monday, December 26, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

'கத்திச்சண்டை' இயக்குனர் சுராஜ், அளித்த ஒரு வீடியோ பேட்டியில் நடிகைகளின் உடை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் தெரிவித்த கருத்து நடிகைகள் மத்தியில் பெரும் கோப அலைகளை ஏற்படுத்தியது. குறிப்பாக இந்த படத்தின் நாயகி தமன்னா, மற்றும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா ஆகியோர் தெரிவித்த கடுமையான கண்டனங்கள் திரையுலகை அதிர வைத்தன.

மேலும் பெரும்பாலான சமூக வலைத்தள பயனாளிகளும், ஊடகங்களும் தொடர்ந்து சுராஜ் கருத்துக்கு கண்டனம் தெரிவித்து வந்தன.

இந்நிலையில் இயக்குனர் சுராஜ் தற்போது மன்னிப்பு கேட்டுள்ளார். அவர் செய்தியாளர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், 'என்னை மன்னியுங்கள். செல்வி தமன்னா உள்ளிட்ட அனைத்து கதாநாயகிகளு என்னை மன்னிக்க வேண்டும். எனக்கு யாரை பற்றியும் தவறாக பேசி அவர்கள் மனதை புண்படுத்த வேண்டும் என்ற எண்ணம் இல்லை. மீண்டும் என்னை மன்னிக்கவும். என்னுடைய வார்த்தைகளை திரும்ப பெறுகிறேன்' என்று கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.