close
Choose your channels

'காஷ்மோரா' காலதாமதம் ஏன்? தயாரிப்பாளர் விளக்கம்.

Monday, September 14, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கார்த்தி, நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் 'காஷ்மோரா' படம் பணச்சிக்கலால் தாமதம் ஆவதாக கடந்த சில நாட்களாக இணையதளங்களிலும், சமூகவலைத்தளங்களிலும் செய்திகள் வெளிவந்த நிலையில், இந்த படத்தின் உண்மை நிலை குறித்து அதன் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு விளக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

'காஷ்மோரா' படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக படக்குழுவினர் கடுமையாக உழைத்து வருகின்றனர். ஒரு தரமான படமாக இந்த படம் அமையவேண்டும் என்பதால் இந்த படத்திற்கு இன்னும் அதிகளவு பணம், எனர்ஜி, மற்றும் டெக்னிக்கல் உதவி ஆகியவை தேவைப்படுகிறது. விரைவில் இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு குறித்த தேதியை அறிவிக்க உள்ளோம். இந்நிலையில் மீடியா நண்பர்களிடம் நாங்கள் கேட்டு கொள்வது என்னவெனில் இந்த படம் குறித்து எந்தவொரு தவறான செய்தியையும் வெளியிட வேண்டாம் என்றும் செய்தியை வெளியிடும் முன்பு எங்களிடம் உறுதி செய்துகொள்ளுமாறும் கேட்டுக்கொள்கிறேன்' என்று கூறியுள்ளார்.

கார்த்தி, நயன்தாரா, ஸ்ரீதிவ்யா, விவேக், மற்றும் பலர் நடித்து வரும் இந்த படத்தை கோகுல் இயக்கி வருகிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வரும் இந்த படத்திற்கு ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவும், சாபு படத்தொகுப்பும் செய்து வருகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment