close
Choose your channels

சன்னிலியோன் சாகும் தினத்தில் என்ன நடக்கும்? சர்ச்சைக்குள்ளான கஸ்தூரி டுவீட்

Wednesday, February 28, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சன்னிலியோன் சாகும் தினத்தில் என்ன நடக்கும்? சர்ச்சைக்குள்ளான கஸ்தூரி டுவீட்

பிரபல நடிகை ஸ்ரீதேவியின் மறைவுதான் அனைத்து இந்திய ஊடகங்களின் தலைப்பு செய்தியாக கடந்த நான்கு நாட்களாக உள்ளது. கிட்டத்தட்ட அனைத்து சேனல்களும், ஸ்ரீதேவியின் பாடல்கள், அவர் நடித்த படங்கள், அவரை பற்றிய செய்திகளின் தொகுப்புகள், ஸ்ரீதேவி ஊடகங்களுக்கு அளித்த பேட்டிகளை ஒளிபரப்பி வருகின்றன. செய்தி சேனல்கள் ஸ்ரீதேவியின் மரணம் குறித்து விவாதம் செய்து வருகின்றன.

ஊடகங்களுக்கு சரியான தீனியாக அமைந்த ஸ்ரீதேவியின் மரணம் குறித்து நடிகை கஸ்தூரி ஒரு நக்கலான டுவீட்டை பதிவு செய்துள்ளார். அதாவது மரணம் அடைந்த ஸ்ரீதேவியின் பாடல்கள், கிளிப்பிங்கை ஆகியவற்றை அனைத்து தொலைக்காட்சி சேனல்கள் ஒளிபரப்பி  வருகின்றன .ஒரு நாள் சன்னி லியோன் சாகும்போது என்ன நடக்கும் என்பதை நினைத்து வியக்கிறேன் என்று கஸ்தூரி தனது டுவீட்டில் கூறியுள்ளார். அவர் கூறியதன் அர்த்தத்தை புரிந்து கொண்ட பலர் இந்த டுவீட்டுக்கு கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். ஒருசிலர் அவருடைய நக்கலை ரசித்து பாராட்டியும் வருகின்றனர்.

தனது டுவீட்டுக்கு கடுமையான விமர்சனங்கள் வந்து கொண்டிருப்பதை பார்த்த கஸ்தூரி, 'இது ஒரு நக்கலான, நையாண்டியான டுவீட் என்பதை மறந்து பலரும் கமெண்ட் அளித்து வருவதாக தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment