சன்னிலியோன் சாகும் தினத்தில் என்ன நடக்கும்? சர்ச்சைக்குள்ளான கஸ்தூரி டுவீட்

  • IndiaGlitz, [Wednesday,February 28 2018]

பிரபல நடிகை ஸ்ரீதேவியின் மறைவுதான் அனைத்து இந்திய ஊடகங்களின் தலைப்பு செய்தியாக கடந்த நான்கு நாட்களாக உள்ளது. கிட்டத்தட்ட அனைத்து சேனல்களும், ஸ்ரீதேவியின் பாடல்கள், அவர் நடித்த படங்கள், அவரை பற்றிய செய்திகளின் தொகுப்புகள், ஸ்ரீதேவி ஊடகங்களுக்கு அளித்த பேட்டிகளை ஒளிபரப்பி வருகின்றன. செய்தி சேனல்கள் ஸ்ரீதேவியின் மரணம் குறித்து விவாதம் செய்து வருகின்றன.

ஊடகங்களுக்கு சரியான தீனியாக அமைந்த ஸ்ரீதேவியின் மரணம் குறித்து நடிகை கஸ்தூரி ஒரு நக்கலான டுவீட்டை பதிவு செய்துள்ளார். அதாவது மரணம் அடைந்த ஸ்ரீதேவியின் பாடல்கள், கிளிப்பிங்கை ஆகியவற்றை அனைத்து தொலைக்காட்சி சேனல்கள் ஒளிபரப்பி  வருகின்றன .ஒரு நாள் சன்னி லியோன் சாகும்போது என்ன நடக்கும் என்பதை நினைத்து வியக்கிறேன் என்று கஸ்தூரி தனது டுவீட்டில் கூறியுள்ளார். அவர் கூறியதன் அர்த்தத்தை புரிந்து கொண்ட பலர் இந்த டுவீட்டுக்கு கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். ஒருசிலர் அவருடைய நக்கலை ரசித்து பாராட்டியும் வருகின்றனர்.

தனது டுவீட்டுக்கு கடுமையான விமர்சனங்கள் வந்து கொண்டிருப்பதை பார்த்த கஸ்தூரி, 'இது ஒரு நக்கலான, நையாண்டியான டுவீட் என்பதை மறந்து பலரும் கமெண்ட் அளித்து வருவதாக தெரிவித்துள்ளார்.

More News

சுபிக்சா சுப்பிரமணியன் கைது: ரூ.750 கோடி மோசடி செய்ததாக புகார்

ரூ.750 கோடி பல்வேறு வங்கிகளில் கடன் பெற்று மோசடி செய்ததாக சுபிக்சா நிறுவனத்தின் உரிமையாளர் சுப்பிரமணியம் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாலிவுட் தமிழ்ப்பெண்ணிடம் பாராட்டு பெற்ற ஜோதிகா

நடிகை ஜோதிகா, 'துமாரி சுலு' என்ற பாலிவுட் படத்தின் ரீமேக்கில் நடிக்கவுள்ளார் என்பதையும் இந்த படத்தை இயக்குனர் ராதாமோகன் நடிக்கவுள்ளார் என்பதையும் நாம் ஏற்கனவே பார்த்தோம்.

டி.ராஜேந்தரின் முக்கிய அறிவிப்பு என்ன தெரியுமா?

தமிழகத்தில் நாளுக்கு ஒரு கட்சி என்ற விகிதத்தில் அரசியல் கட்சிகள் பெருகி கொண்டே போகும் நிலையில் இன்று மேலும் ஒரு புதிய கட்சி உதயமாகியுள்ளது.

ப.சிதம்பரத்தையும் கைது செய்ய வேண்டும்: சுப்பிரமணியம் சுவாமி

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா கைது செய்யப்பட்டபோதே தமிழகத்தில் அடுத்த கைது ப.சிதம்பரம் தான் என்று பேட்டி ஒன்றில் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியம் சுவாமி தெரிவித்திருந்தார்.

கார்த்திக் சிதம்பரம் அதிரடி கைது: அவசரமாக இந்தியா திரும்புகிறார் சிதம்பரம்

முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் அவர்கள்லின் மகன் கார்த்திக் சிதம்பரம் சற்றுமுன்னர் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.