என் கணக்கு தப்பாய் போனதில் ரொம்ப மகிழ்ச்சி: கஸ்தூரி டுவீட்

தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் இன்று முதல் மூன்றாம் கட்ட ஊரடங்கு ஆரம்பித்துள்ள நிலையில் இன்று முதல் தமிழகத்தில் ஒரு சில தளர்வுகளும் தமிழக அரசால் பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதன்படி தனிக் கடைகள் இயங்கும் சமூக இடைவெளியை பயன்படுத்தி ஒரு சில அலுவலகங்கள் மற்றும் தொழிற்சாலைகள் இயங்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

இந்த நிலையில் டாஸ்மாக் கடையும் திறக்கப்படுமோ என்ற ஐயம் பொதுமக்களிடமும் சமூக ஆர்வலர்களிடமும் இருந்தது. ஆனால் நல்ல வேளையாக அண்டை மாநிலங்களில் மதுக்கடைகள் திறப்பது குறித்த அறிவிப்பு வெளிவந்தபோதிலும் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறப்பதற்கு இன்னும் அறிவிப்புகள் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இதுகுறித்து நடிகை கஸ்தூரி தனது சமூக வலைத்தளத்தில் கூறியதாவது: டாஸ்மாக் கை இப்போது திறப்பதில்லை என்ற நல்ல முடிவை எடுத்துள்ள தமிழக அரசுக்கு நன்றி. நானும் கூட கண்டிப்பாக திறப்பார்கள் என்றே எண்ணினேன். என் கணக்கு தப்பாய் போனதில் எனக்கு ரொம்ப மகிழ்ச்சி. தாய்மார்கள், குழந்தைகள் சார்பாக மீண்டும் நன்றி

புதுச்சேரி முழுதும் green/ orange zone என்ற நிலையிலும், மது விற்பனை இல்லை என்ற முடிவெடுத்துள்ள புதுவை முதல்வர் நாராயணசாமி அவர்களுக்கு நன்றி. பொறுப்பான முடிவு. தமிழகத்திலிருந்து பலரும் காரைக்காலுக்கும் பாண்டிச்சேரிக்கும் படையெடுத்து தொற்று பரப்பும் அபாயத்தை முளையிலேயே கிள்ளி விட்டார்’என்று நடிகை கஸ்தூரி குறிப்பிட்டுள்ளார். கஸ்தூரியின் இந்த கருத்துக்கு டிவிட்டர் பயனாளிகள் தங்கள் பாணியில் கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

More News

கொஞ்சம் சீக்கிரம் ரிலீஸ் பண்ணுங்க தலைவரே: ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ரசிகரின் கோரிக்கை

இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் அவர்கள் முதல் முறையாக தயாரிக்கும் திரைப்படம் '99 சாங்ஸ்' என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வந்தன

சென்னையில் மட்டும்  200ஐ தாண்டிய கொரோனா பாதிப்பு: அதிர்ச்சி தகவல்

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனாவின் பாதிப்பு மிக அதிகமாக வருகிறது குறிப்பாக தலைநகர் சென்னையில் கொரோனா பாதிப்பு கட்டுக்கடங்காத நிலையில் உள்ளது.

தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை திடீரென உயர்வு: நாளை முதல் அமல் என தகவல்

பெட்ரோல், டீசல் மீதான மதிப்பு கூட்டு வரியை தமிழக அரசு திடீரென உயர்த்தியுள்ளது. இதனால் நாளை முதல் தமிழகத்தில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.3.25 காசும், டீசல் லிட்டருக்கு ரூ.2.50 காசுகளும் உயர்கிறது

ஒரு கையில் குழந்தை, மறு கையில் சூட்கேஸ்: 265 கிமீ நடந்து சென்ற இளம்பெண்

கொரோனா வைரஸ் காரணமாக மூன்றாம் முறையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து நாளை முதல் மூன்றாம் கட்ட ஊரடங்கு தொடங்கி மே 17ஆம் தேதி முடிவடைகிறது.

சூர்யாவின் 'அருவா' நாயகி குறித்த தகவல்!

நடிகர் சூர்யா தற்போது 'சூரரைப்போற்று' என்ற படத்தில் நடித்து முடித்த நிலையில் விரைவில் அவர் ஹரி இயக்கவுள்ள ஒரு படத்தில் நடிப்பார் என்றும் இந்த படத்திற்கு 'அருவா' என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளதாகவும்