லாஸ்லியா என்ன சொல்லபோகுதோனுக்கு திக் திக்குனு இருக்கு: பிரபல நடிகையின் டுவீட்

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த ஞாயிறு அன்று தொடங்கிய நிலையில் முதல் நாளில் இருந்தே இந்த நிகழ்ச்சிக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது என்பது சமூக வலைத்தளங்களில் பதிவு செய்யப்பட்டும் வரும் கமெண்டுக்களில் இருந்து தெரிய வந்துள்ளது. மேலும் பலர் திரைப்படங்களை விமர்சனம் செய்வது போல் ஒவ்வொரு நாள் நிகழ்ச்சியையும் விமர்சனம் செய்ய தொடங்கிவிட்டனர்.

இந்த நிலையில் நடிகை கஸ்தூரி இந்த நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர் தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது, 'எங்க பிளாட்ஸ்ல எல்லா வீட்டுலயும் குழந்தைகளாம் பாக்குறாங்க.... குழந்தைங்க பாக்குற நிகழ்ச்சியா இது? பெற்றோர்கள் பொறுப்புடன் நடந்து கொள்ளவும் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கடந்த மூன்று நாட்களாக பிக்பாஸ் வீட்டில் ஒரே அழுகாச்சியாக இருப்பது குறித்து குறிப்பிட்ட கஸ்தூரி, 'இதே சேனல்ல கதையல்ல.. னு சொல்லி ஒரு நிகழ்ச்சி.... வந்தவங்களை அமுக்கி பிடிச்சு கட்டாயமா அழவைப்பாங்க... அதுல ஆரமிச்சது... எல்லா ப்ரோக்ராம்லயும் அழுவாச்சி பிளாஷ்பேக் என்றும், போதும்பா விட்ருங்கப்பா... இன்னும் எத்தினி நாளுக்கு சென்டிமென்டை பிழியபோறீங்க...

இப்போவே யாரு எவ்வளோ சோக கதை சொன்னாலும் அழுவாச்சி வரலை... இதுக்கு மேலயும் சோகத்தை பிழியணும்னு அந்த ஸ்ரீலங்கா பொண்ணு யுத்தத்தை பத்தி எதையாவது சொல்லிறப்போவுதோன்னு திக்கு திக்குனு இருக்கு என்றும் கஸ்தூரி குறிப்பிட்டுள்ளார்.

More News

இந்திய அணி எங்களை அரையிறுதிக்கு வரவிடாது: பாகிஸ்தான் முன்னாள் வீரர் குற்றச்சாட்டு

இந்திய அணி இனிவரும் போட்டிகளில் வேண்டுமென்றே தோல்வி அடைந்து எங்களை அரையிறுதிக்கு வரவிடாமல் செய்யும் வாய்ப்பு இருப்பதாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் பாசித் அலி குற்றஞ்சாட்டியுள்ளார்.

குழந்தைகளை வன்கொடுமை செய்பவர்களை தூக்கில் போட்டாலும் பயனில்லை: கமல்ஹாசன்

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் மட்டுமின்றி கடந்த சில ஆண்டுகளாக குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளும் அதிகமாகி வருகிறது

வனிதாவுக்குள்ளும் இவ்வளவு சோகமா? 

பிக்பாஸ் வீட்டில் கடந்த இரண்டு நாட்களாக செண்டிமெண்ட் மழை பொழிந்து வருகிறது. ஏற்கனவே ரேஷ்மா, சேரன், சரவணன், தர்ஷன், மோகன் வைத்யா,

கொலையுதிர் காலம் படத்தின் தடை: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த 'கொலையுதிர்க்காலம்' திரைப்படம் ஜூன் 14ஆம் தேதியே ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் இந்த படத்தின் டைட்டிலில் வெளியான சுஜாதாவின் 'கொலையுதிர்காலம்'

கவுதம் மேனனுடன் இணைந்த சிபிராஜ்!

நடிகர் சத்யராஜ் நடித்த 'வால்டர் வெற்றிவேல்' திரைப்படம் கடந்த 1993ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர்ஹிட்டான நிலையில் தற்போது அவரது மகன் சிபிராஜ் 'வால்டர்' என்ற படத்தில் நடித்து வருகிறார்.