close
Choose your channels

விஜய் நடிப்பதை நிறுத்தினால் சினிமாவுக்கு எந்த பாதிப்பும் இருக்காது: நடிகை கஸ்தூரி

Tuesday, June 18, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் விஜய் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய நிலையில் அவர் இன்னும் ஒரு படம் நடித்துவிட்டு திரையுலகில் இருந்து விலகுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் விஜய் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்று திரையுலக சேர்ந்த பலர் கூறி வருகின்றனர் என்பதும் விஜய்யால் தான் கோடிக்கணக்கான பிசினஸ் திரையுலகில் நடக்கிறது என்றும் அவர் சினிமாவில் விட்டு விலகினால் சினிமாவுக்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும் என்றும் கூறி வருகின்றனர்.

ஆனால் நடிகை கஸ்தூரி இந்த கருத்தை மறுத்து சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். விஜய் சினிமாவில் விட்டு வெளியேறினால் சினிமாவுக்கு எந்த பாதிப்பும் இருக்காது என்றும், விஜய் கடந்த 30 ஆண்டுகளாக தான் சினிமாவில் பெரிய ஸ்டாராக உள்ளார், ஆனால் சினிமா 150 ஆண்டுகளுக்கு முன்னதாக தனது பயணத்தை தொடங்கி விட்டது என்று தெரிவித்தார்.

எந்த ஒரு நபருக்காகவும் சினிமா நிற்காது என்றும், அது விஜய்யாக இருந்தாலும் சரி, அமிதாபச்சனாக இருந்தாலும் சரி, சினிமா தனது பயணத்தை தொடர்ந்து கொண்டே இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

சினிமா என்பது ஒரு கலை, அது அனைவரின் பங்களிப்பையும் சேர்ந்து வளர்ந்து கொண்டுதான் இருக்குமே தவிர, அந்த கலைக்கு எப்போதும் பாதிப்பு வராது’ என்றும் நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார். நடிகை கஸ்தூரியின் இந்த கருத்துக்கு விஜய் ரசிகர்களின் ரியாக்ஷன் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.