விஜய் நடிப்பதை நிறுத்தினால் சினிமாவுக்கு எந்த பாதிப்பும் இருக்காது: நடிகை கஸ்தூரி

  • IndiaGlitz, [Tuesday,June 18 2024]

நடிகர் விஜய் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய நிலையில் அவர் இன்னும் ஒரு படம் நடித்துவிட்டு திரையுலகில் இருந்து விலகுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் விஜய் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்று திரையுலக சேர்ந்த பலர் கூறி வருகின்றனர் என்பதும் விஜய்யால் தான் கோடிக்கணக்கான பிசினஸ் திரையுலகில் நடக்கிறது என்றும் அவர் சினிமாவில் விட்டு விலகினால் சினிமாவுக்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும் என்றும் கூறி வருகின்றனர்.

ஆனால் நடிகை கஸ்தூரி இந்த கருத்தை மறுத்து சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். விஜய் சினிமாவில் விட்டு வெளியேறினால் சினிமாவுக்கு எந்த பாதிப்பும் இருக்காது என்றும், விஜய் கடந்த 30 ஆண்டுகளாக தான் சினிமாவில் பெரிய ஸ்டாராக உள்ளார், ஆனால் சினிமா 150 ஆண்டுகளுக்கு முன்னதாக தனது பயணத்தை தொடங்கி விட்டது என்று தெரிவித்தார்.

எந்த ஒரு நபருக்காகவும் சினிமா நிற்காது என்றும், அது விஜய்யாக இருந்தாலும் சரி, அமிதாபச்சனாக இருந்தாலும் சரி, சினிமா தனது பயணத்தை தொடர்ந்து கொண்டே இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

சினிமா என்பது ஒரு கலை, அது அனைவரின் பங்களிப்பையும் சேர்ந்து வளர்ந்து கொண்டுதான் இருக்குமே தவிர, அந்த கலைக்கு எப்போதும் பாதிப்பு வராது’ என்றும் நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார். நடிகை கஸ்தூரியின் இந்த கருத்துக்கு விஜய் ரசிகர்களின் ரியாக்ஷன் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

 

More News

திமுக எம்பி வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்த டி இமானின் முன்னாள் மனைவி.. என்ன சொல்லியிருக்கார் பாருங்க..!

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தென் சென்னை தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் அபார வெற்றி பெற்ற நிலையில் அவரது வெற்றிக்கு தனது வாழ்த்துக்களை

திடீரென காது கேட்கவில்லை.. பிரபல பாடகியின் அதிர்ச்சி இன்ஸ்டா பதிவு..!

பிரபல பாடகி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திடீரென தனக்கு காது கேட்கவில்லை என்று தெரிவித்துள்ளது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

'கங்குவா' அப்டேட்டே இல்லை.. கடுப்பில் ரசிகர் போட்ட ட்வீட்.. கண்டித்த தயாரிப்பாளர்..!

சூர்யா நடித்த 'கங்குவா' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீசுக்கு தயாராகி வரும் நிலையில் இந்த படத்தின் அப்டேட் கடந்த சில வாரங்களாக இல்லை என்பது சூர்யா ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

சிவகார்த்திகேயன் ஜோடியாக நடித்துள்ளாரா ப்ரியா அட்லி? வைரல் வீடியோ.!

விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருந்த சிவகார்த்திகேயன் அதன் பின்னர் 'மெரினா' என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார் என்பதும் அதனை அடுத்து பல வெற்றி படங்களை தொடர்ந்து கொடுத்துள்ளார்

ஐஸ்வர்யாவுக்கு அர்ஜூன் கொடுத்தது ரூ.500 கோடி வரதட்சணையா? உமாபதிக்கு ஜாக்பாட்..!

சமீபத்தில் ஆக்சன் கிங் அர்ஜூன் மகள் ஐஸ்வர்யாவுக்கும், காமெடி நடிகர் தம்பி ராமையா மகன் உமாபதிக்கும் திருமணம் நடந்தது என்பதும் இதனை அடுத்து சென்னையில் நடந்த வ