பயந்துட்டியா குமாரு: வனிதாவை கிண்டல் செய்யும் கஸ்தூரி

வனிதா விஜயகுமார், பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்தது குறித்து நடிகைகள் கஸ்தூரி, லட்சுமி ராமகிருஷ்ணன் உள்பட ஒரு சில நடிகைகள் தங்களுடைய கருத்தை டுவிட்டரில் தெரிவித்திருந்தார்கள். குறிப்பாக கஸ்தூரி, லட்சுமி ராமகிருஷ்ணன் ஆகிய இருவரும் வனிதா விஜயகுமாரின் திருமண முடிவு குறித்து எந்தவித கருத்தையும் தெரிவிக்கவில்லை. ஆனால் அதே நேரத்தில் பீட்டர் பால், முதல் மனைவியை விவாகரத்து செய்யாமல் இரண்டாம் திருமணம் செய்ததை மட்டுமே கேள்வி எழுப்பினர். அதேபோல் திருமணமான ஒருவரை வனிதா திருமணம் செய்திருப்பது சட்டப்படி தவறு என்றும் வனிதாவிடம் அறிவுறுத்தினர்.

ஆனால் வனிதா இந்த பிரச்சனையை திசை திருப்பும் வகையில் இருவரையும் கடுமையான விமர்சனம் செய்து, இருவரது தனிப்பட்ட விஷயங்களை கிளறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக நேற்று முதல் இன்று காலை வரை கஸ்தூரி மற்றும் வனிதா டுவிட்டரில் மோதிக்கொண்டது கிட்டத்தட்ட குழாயடி சண்டை போல் இருந்ததாக நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் சற்று முன்னர் கஸ்தூரியின் டுவிட்டர் பக்கத்தை தான் ப்ளாக் செய்து விட்டதாக வனிதா விஜயகுமார் அறிவித்துள்ளார். மேலும் கஸ்தூரி ஒரு காமெடி பீஸ் என்றும் அவரிடம் வாதாட தனக்கு விருப்பமில்லை என்றும் வனிதா தெரிவித்து குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த கஸ்தூரி ’பயந்துட்டியா குமாரு’ என்று கிண்டலடித்ததோடு ‘உங்களைச் சுற்றி இருக்கும் நல்ல மனிதர்கள் எல்லோரையும் பிளாக் செய்து விடுங்கள், உண்மையிலேயே நீங்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று விரும்புபவர்களையும் பிளாக் செய்துவிட்டு, சீட்டிங் செய்பவர்களை மட்டும் அருகில் வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்.கஸ்தூரியின் இந்த டுவீட் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.