த்ரிஷா விவகாரத்தில் 2வது முறையாக புகார் அளித்த கருணாஸ்.. இந்த முறை யார் மீது?

  • IndiaGlitz, [Saturday,February 24 2024]

நடிகர் கருணாஸ் ஏற்கனவே தன்னை பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசிய முன்னாள் அதிமுக பிரமுகர் ஏவி ராஜூ மீது காவல்துறையில் புகார் அளித்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு புகார் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னாள் அதிமுக பிரமுகர் ஏவி ராஜு என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன் கூவத்தூர் விவகாரம் குறித்து பேட்டி அளித்த போது ’த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய கூறிய வகையில் பேசினார். அதுமட்டுமின்றி நடிகர் கருணாஸ் குறித்தும் அவர் பேசியது பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.

இந்த நிலையில் இது குறித்து ஏற்கனவே நடிகர் கருணாஸ் காவல்துறையில் ஏவி ராஜு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்துள்ளார். இந்த நிலையில் தன்னை பற்றி எந்தவிதமான ஆதாரமும் இன்றி, அவதூறு கருத்துக்களை யூட்யூபில் சிலர் பரப்பி வருவதாகவும், அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும். காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரில் நடிகை த்ரிஷா மற்றும் சில நடிகைகளை நான்தான் ஏற்பாடு செய்து கொடுத்தேன் என உண்மைக்கு மாறான கருத்துக்களை யூட்யூபில் சிலர் பரப்பி வருகின்றனர், எந்தவித அடிப்படை ஆதாரமும் இன்றி பொய்யான தகவலை பரப்பி என்னுடைய நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கிறார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக நான் மிகுந்த மன உளைச்சலில் உள்ளேன், எனவே அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட வீடியோக்களை நீக்க உத்தரவிட வேண்டும் என்று அவர் தனது புகாரில் தெரிவித்துள்ளார். இந்த புகாரின் மீது காவல்துறை என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

More News

திருமணம் செய்ய மறுத்த டிவி ஆங்கரை கடத்திய பெண் தொழிலதிபர்.. காவல்துறையின் அதிரடி நடவடிக்கை..!

தொலைக்காட்சியில் பணிபுரியும் ஆங்கரை பெண் தொழிலதிபர் ஒருவர் திருமணம் செய்வதற்காக கடத்தியதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதுதான் ரம்யா பாண்டியன் ஸ்டைல்.. செம்ம போட்டோஷூட் புகைப்படங்கள்..!

நடிகை ரம்யா பாண்டியன் ஸ்டைலான போட்டோஷூட் புகைப்படங்களை சற்று முன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்களை பார்த்து 'இதுதான் ரம்யா பாண்டியன்

கவர்ச்சி போட்டோ போட்டால் படுக்க அழைப்பீர்களா? கமல், விக்ரம் பட நடிகை ஆவேசம்..!

கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவு செய்தால் அதற்காக எங்களை படுக்கைக்கு அழைப்பீர்களா? என கமல் மற்றும் விக்ரம் படங்களில் நடித்த நடிகை ஆவேசமாக கேள்வி எழுப்பி உள்ளார்.

இனிமேல் என்னை தேடி நீங்க வரவேண்டாம்.. உங்களை தேடி நான் வர்றேன்: ராகவா லாரன்ஸ்..!

இனிமேல் ரசிகர்கள் என்னை தேடி வர வேண்டாம் என்றும் ரசிகர்களை தேடி நானே வருகிறேன் என்றும் கூறியுள்ள நடிகர், இயக்குனர் ராகவா லாரன்ஸ், முதல் கட்ட சந்திப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

மீண்டும் ஹீரோவான நடிகர் ஸ்ரீகாந்த்.. 'சத்தமின்றி முத்தம் தா' டிரைலர்..!

கடந்த 2000 ஆண்டுகளில் பல திரைப்படங்களில் நாயகனாக நடித்த நடிகர் ஸ்ரீகாந்த் மீண்டும் நாயகனாக நடித்த 'சத்தமின்றி முத்தம் தா'  என்ற படத்தின் டிரைலர் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.