close
Choose your channels

பிரதமர் வருகையை புறக்கணிப்பதாக நடிகர்-எம்.எல்.ஏ அறிவிப்பு

Saturday, February 24, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரதமர் வருகையை புறக்கணிப்பதாக நடிகர்-எம்.எல்.ஏ அறிவிப்பு

பாரத பிரதமர் நரேந்திரமோடி இன்று தமிழகம் வருகை தருகிறார் என்பதும், இன்று நடைபெறும் மானிய விலை ஸ்கூட்டர் வழங்கும் விழாவில் கலந்து கொள்கிறார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் பிரதமரின் வருகையை முன்னிட்டு சென்னை விமான நிலையத்தில் ஏழடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் பிரதமரை வரவேற்க அதிமுக எம்.எல்.ஏக்கள், எம்பிக்கள் மற்றும் பாஜக பிரமுகர்கள் தயாராக உள்ளனர். இன்று மொத்தம் 1000 நபர்களுக்கு 50% இலவச மானியத்துடன் கூடிய ஸ்கூட்டர் வழங்கப்படவுள்ளது. பிரதமர் மோடி தனது கையால் 5 நபர்களுக்கு ஸ்கூட்டர் கொடுத்து இந்த விழாவை தொடங்கி வைக்கின்றார்

இந்த நிலையில் பிரதமர் பங்கேற்கும் மானிய ஸ்கூட்டர் வழங்கும் விழாவை புறக்கணிப்பதாக நடிகரும் எம்.எல்.ஏவுமான கருணாஸ் அறிவித்துள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் பிரதமர் நடுநிலையாக செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டு கூறி அதற்காகவே இந்த விழாவை புறக்கணிப்பதாக கருணாஸ் கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment