அன்னை தமிழ்நாட்டில் அனைவருக்கும் ரஜினி சொந்தம். கூறியது யார் தெரியுமா?

  • IndiaGlitz, [Saturday,July 23 2016]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' திரைப்படத்தை நேற்றைய முதல் நாளில் ரசிகர்கள் மட்டுமின்றி கோலிவுட் திரையுலகினர்களும் மிகுந்த ஆர்வத்துடன் பார்த்தார்கள் என்பதை பார்த்தோம். கிட்டத்தட்ட கோலிவுட் திரையுலகமே நேற்று படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு 'கபாலி'யை பார்க்க திரையரங்குகளுக்கு சென்றுவிட்டது.
சிவகார்த்திகேயன், அனிருத், சித்தார்த், விக்னேஷ் சிவன், ஜெயராம் உள்பட பல நடிகர்கள் நேற்று ரசிகர்களோடு ரசிகர்களாக நேற்று 'கபாலி' படத்தை பார்த்து ரசித்தனர். இந்நிலையில் இந்த படத்திற்கு எதிரான விமர்சனத்தை ஒருசிலர் சமூக வலைத்தளங்களில் பரப்பி வரும் நிலையில் நேற்று இந்த படத்தை பார்த்த பிரபல காமெடி நடிகர் கருணாகரன், 'இதுகுறித்து பதிலடி கொடுத்துள்ளார்.
'தலைவா நாங்கள் உங்களை மிகவும் நேசிக்கின்றோம். ஒருசிலர் எதிர்மறை விமர்சனங்களை தந்தாலும் எங்களை மாற்ற முடியாது. எங்களுக்கு வழிகாட்டும் ஒரே நடிகர் நீங்கள்தான். அன்னை தமிழ் நாட்டில் அனைவருக்கும் நீங்கள் சொந்தம்' என்று தனது சமூக வலைத்தளத்தில் கருணாகரன் பதிவு செய்துள்ளார்.