முதல் பாகம் எடுத்த அதே பஸ்ஸில் 'சுந்தரா டிராவல்ஸ் 2' படப்பிடிப்பு? 

  • IndiaGlitz, [Thursday,July 22 2021]

முரளி, வடிவேலு நடித்த ’சுந்தரா டிராவல்ஸ்’ திரைப்படம் கடந்த 2002ஆம் ஆண்டு வெளிவந்த நிலையில் தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த படத்தில் முரளி கேரக்டரில் யோகிபாபு, வடிவேலு கேரக்டரில் கருணாகரன் நடிக்க இருப்பதாகவும் சமீபத்தில் செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் இந்த படம் குறித்து கருணாகரன் கூறியபோது ’சுந்தரா டிராவல்ஸ் படம் குழந்தைகளுக்கு மிகவும் கவர்ந்த படமாக இருந்தது என்றும், அதேபோல் இரண்டாம் பாகமும் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார். இரண்டாம் பாகத்தின் கதை முழுக்க முழுக்க பேருந்தில் உள்ளே எடுக்கப்படும் என்றும், அந்த பேருந்தில் நடந்த நிகழ்வு ஒன்று தான் இந்த படத்தின் கதை என்றும் கூறினார்.

மேலும் முதல் பாகத்தை எடுத்த அதே பேருந்தில் இரண்டாம் பாகத்தையும் எடுக்க முயற்சி செய்யப்பட்டு வருவதாகவும் இத்தனை வருஷமாக அந்த பேருந்தை பேருந்தின் உரிமையாளர் வைத்திருக்கிறார்களா? என்று தெரியவில்லை என்றும் அப்படியே அவர் வைத்திருந்தாலும் எங்கள் கையில் பேருந்து வந்தால் அந்த பேருந்து என்ன ஆகும் என்றும் தெரியவில்லை என்றும் காமெடியாக கூறினார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் தொடங்க இருப்பதாகவும் சென்னை மற்றும் சிறுமலை பகுதிகளில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

More News

"நான் கர்ப்பமாக உள்ளேன்".....! அழகான வில்லி நடிகை பதிவிட்ட புகைப்படம்....!

வில்லியாக நடித்து, வெண்பாவாக மக்கள் மனதில் பதிந்த நடிகை ஃபரீனா கர்ப்பமாக உள்ளார்.

பிரபல நடிகருடன் மாலையும் கழுத்துமாய் வனிதா: அடுத்த திருமணமா?

பிரபல நடிகருடன் திருமணக்கோலத்தில் மாலையும் கழுத்துமாக இருக்கும் புகைப்படத்தை நடிகை வனிதா விஜயகுமார் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட நிலையில் வனிதாவின் அடுத்த திருமணமா என்ற

ரோல்ஸ்ராய் கார் வழக்கு: விஜய்யின் மேல்முறையீட்டு மனு விசாரணை எப்போது?

விஜய்யின் ரோல்ஸ்ராய்ஸ் கார் வரிவிதிப்பின் மேல்முறையீட்டு மனு நாளை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது 

டிராவிட் கூறிய ஒரு வார்த்தையால் வெற்றிக்கோப்பை… இலங்கை கிரிக்கெட்டில் நடந்த அதிசயம்!

உலகிலேயே “பி“ கிரிக்கெட் டீம் ஒன்று சர்வதேச கிரிக்கெட் தொடரில் கலந்து கொண்டு 2-0 என்ற கணக்கில் வெற்றிப் பெற்றுள்ளது

தாஜ்மஹாலை விட 3 மடங்கு பெரிய கோள்… பூமியை நோக்கி வருவதால் அதிர்ச்சி!

தாஜ்மஹாலின் அளவைவிட 3 மடங்கு பெரிய அளவுள்ள, சிறிய கோள் ஒன்று பூமியை நோக்கி அதிகவேகமாக வந்து கொண்டு இருக்கிறது.