பாகுபலியுடன் கனெக்ஷன் ஆன 'கோ' கார்த்திகா

  • IndiaGlitz, [Sunday,July 03 2016]

இயக்குனர் கே.வி.ஆனந்த் இயக்கிய 'கோ' படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான பிரபல நடிகை ராதாவின் மகள் கார்த்திகா அதன்பின்னர் பாரதிராஜாவின் 'அன்னக்கொடி', 'புறம்போக்கு' உள்பட ஒருசில படங்களில் நடித்தார். இந்நிலையில் தற்போது அவர் தொலைக்காட்சி சீரியல் ஒன்றில் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துளது.
இந்தியாவின் மிக பிரமாண்ட படமான 'பாகுபலி' மற்றும் பாகுபலி 2' ஆகிய படங்களின் கதாசிரியரும் இந்த படங்களின் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலியின் தந்தையுமான விஜேந்திர பிரசாத் எழுதும் கதை ஒன்று விரைவில் வட இந்தியாவின் முன்னணி தொலைக்காட்சியில் சீரியலாக தயாராகவுள்ளது. இந்த சீரியலை பிரபல இயக்குனர் Goldie Behl இயக்கவுள்ளார்.
இந்த தொலைக்காட்சி சீரியலின் நாயகனாக ரஜினீஷும் நாயகியாக கார்த்திகா நாயரும் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த சீரியலுக்கு பெரும் வரவேற்பு கிடைக்கும் என்ரும் இதன்மூலம் கார்த்திகா நாயருக்கு மீண்டும் சினிமாவில் ரீஎண்ட்ரி கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.