'பேட்ட 2' உருவாகிறதா? கார்த்திக் சுப்புராஜ் அதிரடி பதில்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவான ’பேட்ட’ திரைப்படம் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்றது. நீண்ட இடைவெளிக்கு பின்னர் ரஜினியின் பழைய ஸ்டைல் மற்றும் இளமையான ரஜினியை திரையில் பார்க்க முடிந்ததாக ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர். மேலும் இந்த படம் வசூலில் அளவிலும் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் அவ்வப்போது ரஜினி ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் ’பேட்ட’ படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் இதுகுறித்து ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த கார்த்திக் சுப்புராஜ் ’பேட்ட’ படத்தின் திரைக்கதையை உருவாக்கும்போது அதன் இரண்டாம் பாகம் குறித்து எந்த ஐடியாவும் தனக்கு இல்லை என்றும் ஆனால் தற்போது சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கூறும் கதைகளைக் கேட்டால் உண்மையிலேயே ’பேட்ட’ படத்தின் இரண்டாம் பாகம் உருவாக வாய்ப்பு இருப்பதாகவும் நேரமும் காலமும் கூடி வந்தால் எதிர்காலத்தில் ’பேட்ட 2’திரைப்படம் உருவாகலாம் என்றும் அவர் கூறியுள்ளார்

’பேட்ட’ படத்தில் விஜய் சேதுபதி கேரக்டரை ரஜினிகாந்த் கேரக்டர் கொன்று பழி வாங்குவதோடு படம் முடிந்திருக்கும். அதன்பின் என்ன நடந்திருக்கலாம் என்பது குறித்த கற்பனைகளை ரசிகர்கள் அவ்வப்போது தெரிவித்து வருகின்றனர். இவற்றில் ஏதாவது ஒன்றை கருவாக எடுத்துக் 'பேட்ட 2’ திரைப் படத்தின் திரைக்கதையை கார்த்திக் சுப்புராஜ் உருவாக்குவாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

More News

7 மொழிகளில் உருவாகும் 3D படத்தில் ஹீரோவாக நடிக்கும் தனுஷ் பட வில்லன்

தமிழ் உள்பட 7 மொழிகளில் உருவாகும் 3D த்ரில் படத்தில் தனுஷ் படத்தில் வில்லனாக நடித்த நடிகர் ஒருவர் நடிக்க இருப்பதாக வெளிவந்துள்ள செய்தி அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது

ஆபாச கமெண்ட் பதிவு செய்த ரசிகரை நேரில் சந்தித்து தமிழ் நடிகை கேட்ட அதிரடி கேள்வி!

சமூக வலைத்தளத்தில் ஆபாசமாக கமெண்ட் செய்த நெட்டிசன் ஒருவரை 'உங்களுக்கு 30 நிமிட சந்தோசத்தை கொடுக்கும் ஆள் நான் இல்லை' என்று சாட்டையடி பதில் கொடுத்த நடிகை அபர்ணா நாயர்

சுஷாந்த் உள்பட 3 பிரபலங்கள் மறைவு குறித்து சிம்பு அறிக்கை!

சமீபத்தில் தற்கொலை செய்து கொண்ட பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங், சிம்புவின் நண்பர் என்பது பலர் அறிந்ததே. அதேபோல் சிம்புவுக்கு நெருக்கமான நண்பர்களான

சீன எல்லையில் மோதல் ஏற்படக் காரணம் என்ன??? இருதரப்புகள் கூறும் விளக்கம்!!!

கடந்த மே மாதம் 5, 6 தேதிகளில் இருந்து இந்திய எல்லைப் பகுதியான லடாக் பகுதியில் சீன ராணுவம் அத்து மீறுகிறது.

இவருடைய பந்தை எதிர்க்கொள்ள நான் ரொம்பவே சிரமப்பட்டேன் – ஸ்டீவ் ஸ்மித் கருத்து!!!

ஆஸ்திரேலிய அணியின் தலைசிறந்த பேட்ஸ்மேன் ஆக விளங்கும் ஸ்டீவ் ஸ்மித் தற்போது ஒரு சுவாரசியமான கருத்தை பகிர்ந்து கொண்டு இருக்கிறார்