எதிர்பார்த்தது நடந்துவிட்டது.. 'சூர்யா 44' படத்தின் மாஸ் அறிவிப்பை வெளியிட்ட கார்த்திக் சுப்புராஜ்..!

  • IndiaGlitz, [Wednesday,May 15 2024]

சூர்யா நடிப்பில், கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாக இருக்கும் ’சூர்யா 44’ படத்தின் அறிவிப்பு கடந்த சில நாட்களுக்கு முன் வெளியான நிலையில் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக செய்திகள் வெளியானது.

மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஜூன் முதல் வாரத்தில் அந்தமான் நிக்கோபார் தீவில் நடைபெற இருப்பதாகவும், 40 நாட்கள் இந்த தீவில் படப்பிடிப்பு நடைபெறும் என்றும் கூறப்பட்டது. அது மட்டும் இன்றி இந்த படத்தில் ஹாலிவுட் ஸ்டண்ட் இயக்குனர்கள் நிக் - பவல் இணைய இருப்பதாகவும் கூறப்பட்ட நிலையில் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைக்க இருப்பதாக ஏற்கனவே தகவல் கசிந்த நிலையில் சற்றுமுன் கார்த்திக் சுப்புராஜ் தனது சமூக வலைத்தளத்தில் ’சூர்யா 44’ படத்தின் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்து புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளார்.

இன்று சந்தோஷ் நாராயணன் தனது பிறந்த நாளை கொண்டாடும் நிலையில் இந்த போஸ்டர் அவருக்கு மிகச் சிறந்த பிறந்தநாள் பரிசாக கருதப்படுகிறது. எனவே எதிர்பார்த்தபடியே சூர்யா, கார்த்திக் சுப்புராஜ், சந்தோஷ் நாராயணன் கூட்டணி இணைந்து விட்டதை அடுத்து இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் இந்த படத்தில் நடிக்கும் நாயகி உள்பட மற்ற நட்சத்திரங்களும் பிற தொழில்நுட்ப கலைஞர்களின் அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

இந்தியா - பப்புவா நியூ கினியா இணையும் படத்தை தயாரிக்கும் பா ரஞ்சித்.. டைட்டில் -ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ்..!

முதல் முறையாக இந்தியா மற்றும் பப்புவா நியூ கினியா ஆகிய இரு நாடுகளின் திரையுலகில் இணையும் படத்தை பா ரஞ்சித் தயாரிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதோடு இந்த படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக்

சூர்யா படம் டிராப்.. 2 முன்னணி நடிகர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய சுதா கொங்கரா?

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாக இருந்தால் 'புறநானூறு' திரைப்படம் கிட்டதட்ட டிராப் ஆகிவிட்டதாக கூறப்படும் நிலையில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகும்

ஒரே நாளில் 2 படங்கள் அறிவிப்பு.. இரண்டும் சொந்த படங்கள்: ராகவா லாரன்ஸ்

நடிகர், நடன இயக்குனர் மற்றும் இயக்குனர் ராகவா லாரன்ஸ் நாளை இரண்டு புதிய படங்களின் அறிவிப்பை வெளியிட போவதாகவும் இரண்டுமே அவரது சொந்த தயாரிப்பு என்றும் அறிவித்துள்ளதை அடுத்து

நடிகை சாயாசிங் வீட்டில் நடந்த அதிர்ச்சி சம்பவம்.. போலீசார் எடுத்த அதிரடி நடவடிக்கை..!

நடிகை சாயா சிங் வீட்டில் திருட்டு சம்பவம் நடந்த நிலையில் அதிரடியாக காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து குற்றவாளியை கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரதமர் மோடியின் 10 ஆண்டு ஆட்சி எப்படி இருந்தது.. நடிகை ராஷ்மிகா மந்தனா கூறிய முக்கிய தகவல்..!

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவரான ராஷ்மிகா மந்தனா தற்போது பாலிவுட்டிலும் பிஸியாக இருந்து வருகிறார். இந்த நிலையில் பிரதமர் மோடியின் 10  ஆண்டு