ரஜினி படம் குறித்து கார்த்திக் சுப்புராஜ் கூறிய லேட்டஸ்ட் தகவல்

  • IndiaGlitz, [Saturday,February 24 2018]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக புதிய படத்தை தயாரிக்கவுள்ளது என்று நேற்று வெளியான செய்தி ரஜினி ரசிகர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி. மேலும் பா.ரஞ்சித்தை அடுத்து ரஜினிகாந்த், மேலும் ஒரு இளம் இயக்குனருடன் இணைவதால் இந்த படத்தின் எதிர்பார்ப்பும் உச்சத்தில் உள்ளது.

இந்த நிலையில் ரஜினி படத்தை இயக்குவது குறித்து இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது, 'உண்மையில் எனது மகிழ்ச்சியை வெளிப்படுத்த எனக்கு வார்த்தைகளே கிடைக்கவில்லை. என்னுடைய நீண்ட நாள் கனவு இன்று நனவாகியுள்ளது. நன்றிகள் தலைவா' என்று கூறியுள்ளார். ரஜினியின் தீவிர ரசிகர் ஒருவரே அவரது படத்தை இயக்குவதால் இந்த படம் வேற லெவலில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜுக்கு எஸ்.ஆர்.பிரபு, மனோபாலா உள்பட பலர் தொடர்ந்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த படம் வரும் 2019ல் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

மோடி மோசடியால் விராத் கோஹ்லி பதவிக்கு ஆபத்தா?

பிரபல வைர வியாபாரி நீரவ் மோடி, பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.11500 கோடி கடன் பெற்று வெளிநாட்டுக்கு தப்பியோடிய நிலையில் அந்த வங்கியின் நிலை ஆட்டம் கண்டுள்ளது

ஜிவி பிரகாஷின் அடுத்த படத்தை இயக்கும் தேசிய விருது பட இயக்குனர்

கடந்த 2006ஆம் ஆண்டு வெளிவந்த தேசிய விருது பெற்ற திரைப்படமான 'வெயில்' படத்தை இயக்கிய இயக்குனர் வசந்தபாலன், ஜிவி பிரகாஷின் அடுத்த படத்தை இயக்க ஒப்பந்தமாகியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

கியூப் நிறுவனத்துடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி: அதிரடி முடிவெடித்த தயாரிப்பாளர் சங்கம்

தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் கியூப் நிறுவனத்துடனான பேச்சுவார்த்தை இன்று பெங்களூரில் நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் டிடிஎஸ் கட்டணத்தை குறைக்க வேண்டும்

ரஜினியின் '2.0' படம் எப்பதான் ரிலீஸ் ஆகும்?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், ஷங்கர் இயக்கிய பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகி வரும் '2.0' திரைப்படம் கடந்த ஆண்டு தீபாவளி திருநாளில் வெளியாகும் என்று முதலில் கூறப்பட்டது.

தனுஷை முதன்முதலாக பதற வைக்கும் நடிகை

தனுஷ் நடித்து வரும் 'மாரி 2' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே. இந்த படத்தில் சாய்பல்லவி மற்றும் முக்கிய கேரக்டரில் வரலட்சுமி சரத்குமார் நடித்து வருகின்றனர்.