ஆஸ்கார் வாங்கினாலும் இதற்கு ஈடாகாது: கார்த்திக் சுப்புராஜின் மனம் திறந்த பேச்சு

  • IndiaGlitz, [Monday,December 10 2018]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட' படத்தை இயக்கிய இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் நேற்று நடந்த ஆடியோ விழாவில் இந்த படம் உருவான விதம் குறித்து பேசினார்.

நான் சின்ன வயதில் இருந்தே தலைவர் ரசிகர். நான் சினிமாவுக்கு வந்தபோது என் படத்தை தலைவர் பாராட்டினால் போதும் என்று தான் நினைத்தேன். 'பீட்சா' படம் வெளியானபோது தலைவர் என்னை போனில் அழைத்து பாராட்டினார். அதுவே எனக்கு பிரமிப்பாக இருந்தது. அதன்பின் 'ஜிகர்தண்டா' வெளியானபோது என்னை நேரில் அழைத்து பாராட்டினார். அப்போது என்னிடம் ஸ்கிரிப்ட் இருக்குதா? என்று கேட்டார். நான் தலைவருக்கு கதை சொன்னவுடன் அவர் அரசியலுக்கு வருவதாக அறிவித்தார். அதனால் அவர் என் படத்தில் நடிக்காமல் போய்விடுவாரோ என பயந்தேன்.

2014ஆம் ஆண்டு அவருக்கு இந்த கதையை சொன்னேன். இப்போதுதான் என கனவு நனவாகியுள்ளது. தமிழ் சினிமாவிலேயே... ஏன் இந்திய சினிமாவிலேயே மனதாரப் பாராட்டுபவர் தலைவர் மட்டும்தான். அவருக்கு பாராட்ட வேண்டிய அவசியம் இல்லை என்றாலும்கூட, பாராட்டுவதில் இருந்து தவறமாட்டார். ‘2.0’ படத்தில் சொல்வது போல் அவரைச் சுற்றி பாஸிட்டிவ் ஆரா இருக்கிறது. அந்த பாஸிட்டிவ் ஆராவை எல்லோருக்கும் பெரிய கிலோமீட்டர் அளவுக்கு பரப்பி வருகிறார்.

படப்பிடிப்பின்போது அவர் எப்படி நடக்கிறார், எப்படி புத்தகம் படிக்கிறார் என்பதை பார்த்து ரசித்துக்கொண்டே இருப்பேன். என்னை தவிர வேறு யார் அவரிடம் அதிகமாக பேசினாலும் எனக்கு பொறாமையாக இருக்கும், அது என் மனைவியாக இருந்தாலும். நான் ஆஸ்கார் விருதே வாங்கினாலும், அது தலைவர் படத்தை இயக்கியதற்கு ஈடாகாது.

இவ்வாறு கார்த்திக் சுப்புராஜ் பேசினார்.

 

More News

பெரிய ஆட்களை எதிர்த்தால்தான் பெரிய ஆளாக வரமுடியும்: பேட்ட விழாவில் விஜய்சேதுபதி

பேட்ட' படத்தின் இசை வெளியீடு நேற்று நடந்தபோது சில நிமிடங்கள் தாமதமாக விஜய்சேதுபதி வந்தார். அவர் வரும்போது ரஜினி உள்பட அனைவரும் எழுந்து நின்று அவரை வரவேற்றனர். இந்த விழாவில் அவர் பேசியதாவது:

விஜய்சேதுபதியை வானளவு புகழ்ந்த ரஜினிகாந்த்: 'பேட்ட' ஆடியோ விழாவில் சுவாரஸ்யம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் ரஜினிகாந்த், கார்த்திக் சுப்புராஜ், கலாநிதி மாறன்

சிம்புவின் 'மாநாடு' தொடங்கும் தேதி அறிவிப்பு

மணிரத்னம் இயக்கத்தில் சிம்பு நடித்த 'செக்க சிவந்த வானம்' திரைப்படம் நல்ல வெற்றியை பெற்றதை அடுத்து அவர் தற்

உடுமலை கவுசல்யா மறுமணம்: இசைக்கலைஞரை மணந்தார்

தமிழகத்தை மட்டுமின்றி இந்தியாவையே உலுக்கிய ஆணவக்கொலை சம்பவம் உடுமலையில் சங்கர் என்ற இளைஞர் கெளரவக்கொலை செய்யப்பட்ட சம்பவம் என்பதை யாராலும் மறக்க முடியாது

'பேட்ட' படத்தில் த்ரிஷாவின் கேரக்டர் என்ன தெரியுமா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள 'பேட்ட' திரைப்படம் பொங்கல் தினத்தில் வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தின் புரமோஷன் ஜெட் வேகத்தில் நடைபெற்று வருகிறது.