கார்த்திக் சிதம்பரம் அதிரடி கைது: அவசரமாக இந்தியா திரும்புகிறார் சிதம்பரம்

  • IndiaGlitz, [Wednesday,February 28 2018]

முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் அவர்கள்லின் மகன் கார்த்திக் சிதம்பரம் சற்றுமுன்னர் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கார்த்தி சிதம்பரம் தமிழக போலிசாரின் உதவியால் கைது செய்யப்பட்டு டெல்லி அழைத்து செல்லப்பட்டதாகவும், இன்று மாலை அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

மேலும் முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் தற்போது லண்டனில் உள்ளார். மகன் கார்த்திக் கைது செய்தி அறிந்ததும், அவர் அவசரமாக இந்தியா திரும்பவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது

ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் சட்டவிரோதமாக அன்னிய முதலீடு செய்வதற்கு கார்த்தி சிதம்பரம் உடந்தையக இருந்ததாக கூறப்பட்ட புகாரின்பேரில் சிபிஐ அதிகாரிகள் அவரிடம் கடந்த சில மாதங்களாக விசாரணை நடத்தி வந்தனர். மேலும் கார்த்தி சிதம்பரம் வெளிநாடு தப்பிச் செல்லாத வகையில் அவருக்கு லுக்அவுட் நோட்டீஸ் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்டது. இதனையடுத்து கார்த்தி சிதம்பரத்தின் வங்கி கணக்குகள் மற்றும் சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கிய நிலையில் இன்று அவர் திடீரென கைது செய்யப்பட்டுள்ளார்

கடந்த 16-ஆம் தேதி கார்த்திக் சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கரன் ராமன் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் காலமானார்.

காஞ்சி சங்கராச்சாரியார் என்று அழைக்கப்படும் ஜெயெந்திர சரஸ்வதி அவர்கள் சற்றுமுன்னர் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.

'சூர்யா 36' படத்தின் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட எஸ்.ஆர்.பிரபு

சூர்யா நடித்த 'தானா சேர்ந்த கூட்டம்' திரைப்படம் சமீபத்தில் வெளிவந்து ரசிகர்களின் ஆதரவை பெற்ற நிலையில் அவர் தற்போது செல்வராகவன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

என்பார்மிங் முடிந்தது: துபாய் விமான நிலையத்தில் ஸ்ரீதேவி உடல்

துபாயில் மரணம் அடைந்த ஸ்ரீதேவி உடல் துபாய் போலீசாரின் அனைத்து விசாரணை நடவடிக்கைகளும் முடிந்துவிட்ட நிலையில் சில மணி நேரங்களுக்கு முன்பு அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

கவுதமி சம்பள பாக்கி குறித்து கமல் கருத்து

கமல்ஹாசன் நடித்த தசாவதாரம், விஸ்வரூபம் ஆகிய படங்களில் தான் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றியதாகவும், அதற்கான சம்பளத்தை கமல்ஹாசனின் நிறுவனம் தனக்கு தரவில்லை என்றும் சமீபத்தில் கவுதமி புகார் கூறியிருந்தார்.

ரஷ்ய தொழிலதிபருடன் ரஜினி-விஜய் நாயகிக்கு திருமணம்

பிரபல தென்னிந்திய நடிகையும், ரஜினி, விஜய், தனுஷ் உள்பட முன்னணி நாயகர்களுடன் ஜோடி போட்டவருமான நடிகை ஸ்ரேயாவுக்கு வரும் மார்ச் மாதம் திருமணம் நடைபெறவுள்ளது. அவருக்கு நமது அட்வான்ஸ் திருமண வாழ்த்துக்கள்