விஜய்யை அடுத்து ரஜினியுடன் மோதும் கார்த்திக் 

  • IndiaGlitz, [Wednesday,September 25 2019]

தளபதி விஜய் நடித்த 'பிகில்' திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாக உள்ள நிலையில் அதே நாளில் கார்த்தி நடித்த 'கைதி' திரைப்படமும் வெளியாவது உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் விஜய்யை அடுத்து ரஜினி படம் வெளியாகும் தினத்தன்றும் கார்த்தி நடித்த படம் ஒன்று வெளியாக இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குநர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'தர்பார்'. இந்த படம் வரும் ஜனவரி மாதம் பொங்கல் அன்று வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் தற்போது நடந்து வரும் நிலையில் தற்போது அதே பொங்கல் தினத்தில் கார்த்தியின் இன்னொரு படம் வெளியாக இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. கார்த்தி, ஜோதிகா இருவரும் இணைந்து நடிக்க ஜீத்து ஜோசப் இயக்கி வரும் படம் தான் பொங்கலன்று வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் இந்த இரு படங்களின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

கடந்த பொங்கல் தினத்தில் ரஜினியின் 'பேட்ட' திரைப்படம் மற்றும் அஜித்தின் விஸ்வாசம் திரைப்படம் வெளிவந்து இரண்டு படங்களும் வெற்றி பெற்றது போல் வரும் தீபாவளி மற்றும் பொங்கல் தினங்களில் வெளியாகும் படங்களும் வெற்றி பெற வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாகும்

More News

பிக்பாஸ் வீட்டில் புரமோஷன் செய்யப்பட்ட பா.ரஞ்சித் திரைப்படம்!

பிக்பாஸ் வீட்டில் நேற்று மகத் மற்றும் யாஷிகா ஆனந்த் ஆகிய இருவரும் சிறப்பு விருந்தினர்களாக வருகை தந்தனர். இதில் நேற்று மகத், யாஷிகா நடித்த 'இவன் தான் உத்தமன்' என்ற படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டது

வெளியேறும் முன் கவின் பேசிய நெகிழ்ச்சியான பேச்சு

பிக்பாஸ் வீட்டில் இருந்து இன்றே வெளியேறும் நபருக்கு ரூ.5 லட்சம் வழங்கப்படும் என்ற பிக்பாஸ் அறிவிப்பை அடுத்து கவின் வெளியேற முடிவு செய்ததாக இன்றைய மூன்றாவது புரமோவில் இருந்ததை ஏற்கனவே பார்த்தோம்

பிகில் இசை வெளியீட்டு விழா சர்ச்சை: விஜய்க்கு தேசிய கட்சி ஆதரவு

விஜய் நடித்த 'பிகில்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேசிய சில கருத்துக்கள் ஆளுங்கட்சியை அதிருப்தி அடைய செய்த நிலையில் விஜய்க்கு கடந்த சில நாட்களாக தமிழக அமைச்சர்கள்

பிக்பாஸ் வீட்டை விட்டு இன்றே வெளியேறுகிறாரா கவின்

பிக்பாஸ் நிகழ்ச்சி இன்னும் ஒரு வாரம் மட்டுமே இருக்கும் நிலையில் தற்போதுள்ள ஐவரில் மூவர் இறுதி போட்டிக்கு தகுதி பெறுவர். அதில் இந்த வாரம் ஞாயிறு அன்று ஒருவர் வெளியேற்றப்பட்டுவிட்டால்

ரஜினியை அடுத்து எம்ஜிஆர் டைட்டிலை தேர்வு செய்த பொன்ராம்!

ஸ்க்ரீன்‌ மீடியா எண்டர்டெயின்மெண்ட்‌ பிரைவேட்‌ லிமிடெட்‌ தயாரிப்பில்‌ பொன்‌.ராம்‌ - சசிகுமார்‌ கூட்டணியில் இன்று தொடங்கியுள்ள திரைப்படத்திற்கு  'எம்‌.ஜி.ஆர்‌ மகன்‌'