அடுத்தடுத்த படங்கள் குறித்து கார்த்தி கூறியது என்ன?

  • IndiaGlitz, [Tuesday,November 01 2016]

கார்த்தி முதல்முறையாக மூன்று வேடங்களில் நடித்த 'காஷ்மோரா' மிகப்பெரிய ஹிட்டாகியுள்ள நிலையில் அடுத்ததாக மணிரத்னம் இயக்கத்தில் 'காற்று வெளியிடை' மற்றும் 'சதுரங்க வேட்டை' வினோத் இயக்கத்தில் ஒரு படமும் கார்த்தி நடித்து வருகிறார்.
இந்த படங்கள் குறித்து அவர் கூறியதாவது: மணிரத்னம் இயக்கத்தில் நடித்து வரும் 'காற்று வெளியிடை' திரைப்படம் தனது திரையுலக வாழ்வில் மறக்க முடியாத படம். இந்த படம் எனக்கு பலவிதமான புது அனுபவங்களை கொடுத்துள்ளது. 20 நாட்கள் லடாக் பகுதியில் படமாக்கப்பட்ட காட்சிகள் பிரஷ்ஷாகவும், வித்தியாசமாகவும் வந்துள்ளது.
அதேபோல் 'சதுரங்க வேட்டை' வினோத் இயக்கத்தில் போலீஸ் வேடத்தில் நடிக்கின்றேன். 'சிறுத்தை' படத்தின் போலீஸ் கேரக்டரில் இருந்து முற்றிலும் மாறுபட்ட கேரக்டர் என்பதும், இந்த படத்தின் கதை மற்ற போலீஸ் கதைகளில் இருந்து வித்தியாசமானது என்பதும் குறிப்பிடத்தக்கது. வட இந்தியா மற்றும் தென்னிந்தியாவில் படமாக்க திட்டமிட்டிருக்கும் இந்த படத்தின் வட இந்திய லொகேஷன்களை தற்போது இயக்குனர் வினோத் தேடி வருகிறார்' என்று கூறினார்.