எப்படி விவசாயம் கத்துகிட்ட? சூர்யா கேள்விக்கு கார்த்தி கூறிய பதில்!

  • IndiaGlitz, [Sunday,March 06 2022]

தமிழ் திரையுலகின் சகோதர நடிகர்களாகிய சூர்யா மற்றும் கார்த்தி ஆகிய இருவரும் முன்னணி நடிகர்களாக இருக்கும் நிலையில் நடிகராக மட்டுமின்றி சூர்யா ஒரு பக்கம் அகரம் பவுண்டேசன் என்ற இயக்கத்தை நடத்தி ஏழை குழந்தைகளுக்கு கல்வி அளித்து வருகிறார். அதேபோல் இன்னொரு பக்கம் கார்த்தி உழவன் பவுண்டேஷன் என்ற அமைப்பை நடத்தி உழவர்களுக்கு உதவி செய்து வருகிறார்.

இந்த நிலையில் உழவன் பவுண்டேஷன் விருது வழங்கும் விழா சமீபத்தில் நடைபெற்றது. இதில் சூர்யா மற்றும் கார்த்தி ஆகிய இருவரும் கலந்து கொண்டனர். அப்போது சூர்யா கேட்ட ஒரு கேள்விக்கு கார்த்தி சுவாரசியமாக பதில் அளித்தார். எப்படி விவசாயிகளை தேர்வு செய்து பரிசு வழங்குகிறாய்? விவசாயம் பற்றி உனக்கு எப்படி தெரிந்தது? என்று கேட்ட கேள்விக்கு கார்த்தி கூறிய பதில் பின்வருமாறு:

அண்ணனின் அகரம் ஃபவுண்டேஷன் எப்படி கிராமப்புற, ஏழை எளிய மாணவர்களை வளர்த்தெடுக்கிறது என்பதைப் பார்த்து ஈர்க்கப்பட்டேன். அப்போது விவசாயம் தான் நினைவுக்கு வந்தது. விவசாயம் சார்ந்த என்ஜிஓக்கள் என்ன செய்யத் தவறுகிறது என்பதை அறிந்தோம். அதற்காக நிறைய ஆய்வு செய்தோம். அப்போது தான் விவசாயம் எவ்வளவு வித்தியாசமானது, எவ்வளவு உன்னதமானது என்பதை அறிந்து கொண்டேன். ஒரு மண்ணில் விளைவது இன்னொரு மண்ணில் விளைவதில்லை. இந்த காலம் ஃபாஸ்ட் காலம். எல்லாத்துக்கும் உடனடியாக தீர்வு தேடும் காலம். ஆனால் ஒரு விவசாயி விதை விதைத்து, தண்ணீர் பாய்ச்சி, களையெடுத்து பின்னர் அறுவடை செய்கிறார். எத்தனை பொறுமையான வேலை. அந்த உன்னதமான விவசாயிகளை கவுரவிக்கவே இந்த மேடை உள்ளது என்று கூறினார்.

More News

ராகவா லாரன்ஸின் 'துர்கா' படத்தில் இருந்து விலகிய 'பீஸ்ட்' பிரபலங்கள்!

ராகவா லாரன்ஸ் நடிக்க உள்ள 'துர்கா' என்ற படத்திலிருந்து  திடீரென விலகி உள்ளதாக  'பீஸ்ட்' பட பிரபலங்கள் அறிவித்துள்ளனர்.

லாஸ்லியா உடனான காதல் குறித்து கவினின் பதிவு: ரசிகர்கள் அதிர்ச்சி!

பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக இருந்த கவின் மற்றும் லாஸ்லியா இருவரும் காதலித்து வந்ததாக கூறப்பட்டது. மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்தவுடன் இருவரும் திருமணம் செய்து

'நானே வருவேன்' படத்திற்கும் இவர்தான் வில்லனா? ஆச்சரியத்தில் ரசிகர்கள்!

தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் 'நானே வருவேன்' படத்திற்கும் வில்லன் ஒரு பிரபல இயக்குனர் தான் என்பது தற்போது தெரியவந்துள்ளது.

பிக்பாஸ் அல்டிமேட்: வைல்ட்கார்ட் எண்ட்ரியாக இந்த நடிகையா?

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் ஏற்கனவே சதீஷ் மற்றும் சுரேஷ் சக்கரவர்த்தி வைல்ட் கார்டு எண்ட்ரியாக வந்துள்ள நிலையில் இன்று மூன்றாவதாக ஒரு வைல்ட்கார்ட் எண்ட்ரி உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

சிவகார்த்திகேயனுக்கு ஆங்கிலம் கற்று கொடுக்கும் நடிகை!

நடிகர் சிவகார்த்திகேயனுக்கு நடிகை ஒருவர் ஆங்கிலம் கற்றுக் கொடுப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன .