கார்த்தியின் தூக்கத்தை கெடுத்த சூர்யா

  • IndiaGlitz, [Monday,January 25 2016]

சூர்யா நடித்து முடித்துள்ள '24' படத்தின் புதிய போஸ்டர் சமீபத்தில் வெளிவந்து அனைவரையும் மிரட்டியது என்பது அனைவரும் அறிந்ததே. வயதான தோற்றத்தில் கொடூர பார்வையுடன் எலக்ட்ரிக் சேரில் உட்கார்ந்து சூர்யா சிரிக்கும் சிரிப்பு அவரது ரசிகர்களை தூங்கவிடாமல் செய்ததாக சமூக வலைத்தளங்களில் செய்தி வெளிவந்தது.


இந்நிலையில் சூர்யா தனது ரசிகர்களை மட்டுமின்றி தனது சகோதரரும் பிரபல நடிகருமான கார்த்தியின் தூக்கத்தையும் கெடுத்துள்ளதாக தற்போது செய்தி வெளிவந்துள்ளது. கார்த்தி தனது சமூக வலைத்தளத்தில் இந்த போஸ்டர் குறித்து கூறியபோது, 'சூர்யாவின் மிகச்சிறந்த நடிப்பையும் கேரக்டராக மாறிவிடுவதையும் பல படங்களை பார்த்துள்ளோம். ஆனால் இந்த படத்தின் புதிய போஸ்டர் என்னை பல இரவுகள் தூங்கவிடாமல் செய்துவிட்டது' என்று கூறியுள்ளார்.

வரும் தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் வெளியாகவுள்ள '24' படத்தில் சூர்யாவுடன் சமந்தா, நித்யாமேனன் உள்பட பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்த படத்தை விக்ரம்குமார் இயக்கியுள்ளார்.

More News

கபாலி' படத்தின் வட அமெரிக்கா வியாபாரம் குறித்த தகவல்

கோலிவுட்டின் முன்னணி தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு ஒரே நேரத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'கபாலி' மற்றும்

ரஜினி, கமல், விஜய்யை முந்திய அஜித். லயோலா கல்லூரியின் கருத்துக்கணிப்பு

சென்னை லயோலா கல்லூரி அவ்வப்போது தேர்தல் குறித்த கருத்துக்கணிப்புகளை நடத்தி வரும் நிலையில் தற்போது கோலிவுட் திரையுலகின் ஃபேவரேட் நடிகர் யார்? என்ற கருத்துக்கணிப்பை எடுத்து அதன் முடிவை நேற்று அறிவித்துள்ளது....

சிசிஎல் நட்சத்திர கிரிக்கெட் போட்டிக்கு தடையா? சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு

சிசிஎல் என்னும் நட்சத்திர கிரிக்கெட் போட்டி கடந்த சில ஆண்டுகளாக விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது....

மாடர்ன் காலத்தின் மணிரத்னம் கார்த்திக் சுப்புராஜ். எஸ்.ஜே.சூர்யா புகழாரம்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, விஜய்சேதுபதி, அஞ்சலி உள்பட பலர் நடித்து முடித்துள்ள 'இறைவி' திரைப்படம் விரைவில் ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் இந்த படம் குறித்து எஸ்.ஜே.சூர்யா ஒருசில கருத்துக்களை தெரிவித்துள்ளார்....

'கொடி'யை அடுத்து அனிருத் வெளியேறிய மற்றொரு படம்

தனுஷ் முதன்முதலாக இருவேடங்களில் நடித்து வரும் 'கொடி' படத்திற்கு இசையமைக்க முதலில் அனிருத் தான் ஒப்பந்தமாகியிருந்தார்......