கல்வி முறையே தவறாக இருக்கிறது? விரக்தியில் மாணவர் எடுத்து விபரீத முடிவு!

  • IndiaGlitz, [Friday,October 29 2021]

கர்நாடக மாநிலத்தில் பொறியியல் மாணவர் ஒருவர், கல்வி முறையே தவறாக இருக்கிறது, அதில் மாற்றத்தை கொண்டு வரவேண்டும் என வீடியோ பதிவுசெய்து வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் கடும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் இயங்கிவரும் ராஜீவ் இன்ஸ்டியூட் ஆஃப் டெக்னாலஜி கல்வி நிறுவனத்தில் பொறியியல் மாணவராக இருப்பவர் ஹேமந்த் கவுடா. விடுதியில் தங்கிப் படித்துவந்த இவர் கடந்த திங்கள்கிழமை மனவிரக்தியில் 21 நிமிடத்திற்கு ஒரு வீடியோவை பதிவுசெய்து வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது.

மாணவர் ஹேமந்த் பதிவுசெய்து வைத்துள்ள அந்த வீடியோவில் தற்போதைய கல்வி முறையில் இருக்கும் பிரச்சினைகள் குறித்து பேசியுள்ளார். மேலும் ஒருவரின் தொழில் அடிப்படையில் பாகுபாடு காட்டப்படுவது எப்படி சரியாகும் என கேள்வி எழுப்பிய அவர் கல்விமுறையில் கண்டிப்பாக மாற்றம் வேண்டும். மேலும் தனது இறுதிச்சடங்கில் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை மற்றும் கல்வி அமைச்சரும் பங்கேற்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருப்பது ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

More News

கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் காலமானார்!

பிரபல கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் அவர்கள் சற்று முன்னர் மாரடைப்பு காரணமாக பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வந்த நிலையில்

பிரபல நடிகருக்கு மாரடைப்பு: மருத்துவமனை சென்று விசாரித்த முதல்வர்!

பிரபல நடிகருக்கு மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து முதலமைச்சர் நேரில் சென்று விசாரித்ததாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

ரஜினி சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனையில் திடீர் போலீஸ் பாதுகாப்பு! 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நேற்று உடல்நலக்குறைவு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவருக்கு ரத்தநாள கசிவு ஏற்பட்டு இருப்பதாகவும் அதனை சரிசெய்யும்

தாமரைக்கு மிகச்சரியான அட்வைஸ் கொடுத்த ராஜூபாய்: இனிமேலாவது திருந்துவாரா?

பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான தாமரைசெல்வி அப்பாவியான போட்டியாளர் என்றும் கள்ளங்கபடமில்லாத போட்டியாளர் என்றும் நினைத்துக் கொண்டிருக்கையில் திடீரென கடந்த சில நாட்களாக அவரது

ரொனால்டோவிற்கு இரட்டை குழந்தை… வைரலான சோஷியல் மீடியா பதிவு!

கால்பந்து உலகின் ஜாம்பவனாகக் கருதப்படும் கிறிஸ்டியானோ