தமிழ் நடிகையின் இடுப்பில் கைவைத்தாரா பாஜக முதல்வர்? வைரலாகும் வீடியோ

பாஜகவைச் சேர்ந்த முதல்வர் ஒருவர் தமிழ் நடிகை ஒருவரின் இடுப்பில் கைவைத்ததாக வைரலாகி வரும் வீடியோவால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் முதல்வராக இருப்பவர் பாஜகவை சேர்ந்த எடியூரப்பா என்பது தெரிந்ததே. இவர் நேற்று மாண்டியா மாவட்டத்தில் உள்ள காவிரி நீர் திறப்பு விழாவில் கலந்து கொண்டார், இந்த விழாவில் மாண்டியா தொகுதி எம்பி என்ற வகையில் நடிகை சுமலதாவும் கலந்து கொண்டார். இவர் தமிழ் தெலுங்கு கன்னடம் உள்பட பல திரைப்படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடதக்கது.

இந்த நிலையில் காவிரி நீர் திறப்பு விழாவில் முதல்வர் எடியூரப்பா மற்றும் சுமலதா எம்பி ஆகியோர் பூக்களை தூவினார்கள். அப்போது முதல்வர் எடியூரப்பா சுமலதாவின் இடுப்பில் கை வைத்தது போன்ற வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த சுமலதா உடனே கோபத்தில் முதல்வரிடம் பேசுவது போன்றும் உடனே முதல்வர் எடியூரப்பா இடுப்பில் இருந்து கை எடுப்பது போன்றும் காட்சிகள் உள்ளது.

ஆனால் உண்மையில் சுமலதா கோபத்தில் பேசினாரா என்பது தெரியவில்லை. இந்த வீடியோ குறித்து நெட்டிசன்கள் பாஜக முதல்வர் எடியூரப்பாவுக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். நடிகை சுமலதா மறைந்த கன்னட நடிகர் அம்ரிஷின் மனைவி என்பதும் மாண்டியா தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டு எம்பியாக தேர்வு பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

பாக்கத்தான போற இந்த காளியோட ஆட்டத்த..: சிஎஸ்கே வீரரின் அதிர வைக்கும் டுவீட்

தல தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உள்பட மொத்தம் 8 அணிகள் விளையாடும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி செப்டம்பர் 19-ஆம் தேதி முதல் நவம்பர் 10ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்தி தெரியாதவர்கள் விலக வேண்டுமா? கமல்ஹாசன், வைரமுத்து ஆவேசம்!

சமீபத்தில் மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் சார்பில் ஆன்லைன் மூலம் யோகா நேச்சுரோபதி மருத்துவர்களுக்கான பயிற்சி நடைபெற்றது. இந்த பயிற்சியில்

வந்தாரை வாழ வைக்கும் சென்னை: சென்னை தின சிறப்பு கட்டுரை

வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் என்பது தெரிந்ததே. அதேபோல் தமிழகத்தின் உள் மாவட்ட மக்களை குறிப்பாக தென்மாவட்ட மக்களை வாழ வைக்கும் தாய் வீடாக சென்னை இருந்து வருவதை யாராலும் மறுக்க முடியாது.

139 பேர் என்னை பாலியல் வன்கொடுமை செய்தனர்: 25 வயது பெண்ணின் திடுக்கிடும் குற்றச்சாட்டு

25 வயது பெண் ஒருவர் தன்னை கடந்த சில ஆண்டுகளாக 139 பேர் பாலியல் வன்கொடுமை செய்ததாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

முதல்முறையாக தளபதி விஜய்யுடன் பணிபுரிகிறார்களா இந்த இரட்டையர்கள்?

தமிழ் சினிமாவில் முன்னணி ஸ்டண்ட் மாஸ்டர்களாக இருந்து வரும் அன்பு அறிவு என்ற இரட்டையர்கள் அன்பறிவ் என்ற பெயரில் பல திரைப்படங்களின் பணிபுரிந்து வருகின்றனர்