விஜய் ரசிகர்கள் கொலை மிரட்டல்: காவல்துறையில் புகார் செய்ய காமெடி நடிகர் முடிவு

  • IndiaGlitz, [Monday,October 08 2018]

கடந்த இரண்டு நாட்களாக காமெடி நடிகர் கருணாகரனுக்கு விஜய் ரசிகர்களுக்கும் சமூக வலைத்தளங்களில் மோதல் நடந்து வருவது தெரிந்ததே. 'சர்கார்' ஆடியோ விழாவில் விஜய் பேசியது குறித்து நடிகர் கருணாகரன் தனது சமூக வலைத்தளத்தில் சர்ச்சைக்குரிய ஒரு கருத்தை பதிவு செய்ததால் விஜய் ரசிகர்கள் அவரை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். கருணாகரனுக்கும் ஆதரவாக ஒருசிலர் கருத்து தெரிவித்து வருவதால் சமூக வலைத்தளமே பரபர்ப்பில் உள்ளது.

இந்த நிலையில் விஜய் ரசிகர்கள் டுவிட்டர் மற்றும் செல்போனில் தனக்கு கொலை மிரட்டல் விடுத்து வருவதாகவும், எனவே அவர்கள் மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்க இருப்பதாகவும் நடிகர் கருணாகரன் தெரிவித்துள்ளார். இன்று அவர் காவல்துறை ஆணையரை சந்தித்து புகார் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பெண் பத்திரிகையாளர் ஒருவர் விஜய் ரசிகர் மீது இதே குற்றச்சாட்டு காரணமாக காவல்துறையில் புகார் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

More News

இது காலங்காலமாக நடக்கும் பிரச்சனை: '96' பிரச்சனை குறித்து விஜய்சேதுபதி

சமீபத்தில் வெளியான விஜய்சேதுபதியின் '96' திரைப்படம் ஒருசில பைனான்ஸ் பிரச்சனையால் அதிகாலை காட்சி ரத்தானது.

சூர்யா படத்தில் பிரதமராக நடிக்கும் பிரபல நடிகர்?

சூர்யா நடிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கி வரும் திரைப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில் இந்த படத்தில் பிரதமராக ஒரு பிரபல நடிகர் நடித்திருக்கும் செய்திவெளிவந்துள்ளது.

ரஜினி பாடலுக்கு நடனமாடும் நித்யானந்தா சிஷ்யைகள்

நித்தியானந்தா குறித்த சர்ச்சைக்குரிய செய்திகள் வெளியாகி வருவது தெரிந்ததே. சமீபத்தில் கூட ஆடு, மாடு உள்ளிட்ட விலங்குகளை தமிழில் பேச வைக்கும் சாப்ட்வேர் கண்டுபிடித்திருப்பதாக நித்யானந்தா கூறினார்.

விஜய்சேதுபதியின் 'சூப்பர் டீலக்ஸ்' ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸ் தேதி அறிவிப்பு

'செக்க சிவந்த வானம்' , '96' என அடுத்தடுத்த விஜய்சேதுபதியின் படங்கள் வெற்றி பெற்று வருவது அவருக்கும் அவருடைய ரசிகர்களுக்கும் பெரும் உற்சாகத்தை கொடுத்துள்ளது.

காலையில் நீதிபதி, மாலையில் மனைவி: ஒரே நாளில் தற்கொலை செய்து கொண்ட தம்பதிகள்

ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதியில் ஒரே நாளில் ஓய்வு பெற்ற நீதிபதியும் அவரது மனைவியும் ரயில் முன் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.