சூர்யாவை பார்த்தவுடன் 'காந்தாரா' நடிகைக்கு ஏற்பட்ட அதிர்ச்சி: வைரல் புகைப்படம்

  • IndiaGlitz, [Saturday,October 22 2022]

சமீபத்தில் வெளியான கன்னட திரைப்படம் ‘காந்தாரா’ மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தில் நாயகியாக நடித்த நடிகை சப்தமி கெளடா, நடிகர் சூர்யாவை பார்த்தவுடன் இன்ப அதிர்ச்சி அடைந்ததை தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

பிரபல கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டி நடித்து இயக்கிய ‘காந்தாரா’ என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. 20 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இந்த படம் ரூ.120 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கு தமிழ் நடிகர்களான தனுஷ், கார்த்தி உள்பட பலர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தனர்.

இந்த நிலையில் இந்த படத்தில் நாயகியாக நடித்த நடிகை சப்தமி கெளடா தனது சமூக வலைத்தளத்தில் சூர்யாவை சந்தித்து எடுத்த புகைப்படம் குறித்து பதிவு செய்துள்ளார். சூர்யாவை பார்த்ததும் தனது இதயம் ஒரு சில நிமிடங்கள் துடிக்காமல் நின்று விட்டதாக அவர் அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.

சூர்யா மட்டுமின்றி கேஜிஎப் நடிகர் யாஷ், பிரபல பாடகர் விஜய் பிரகாஷ் உள்ளிட்டோருடன் எடுத்த புகைப்படத்தையும் அவர் பகிர்ந்தூள்ளார். மிகப்பெரிய வெற்றிபெற்ற ‘காந்தாரா’ திரைப்படத்தில் நாயகியாக நடித்த சப்தமி கெளடா நடிப்புக்கு பாராட்டுக்கள் குவிந்து வரும் நிலையில் தமிழ் தெலுங்கு திரையுலகில் இவருக்கு அதிக வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.