கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமாரின் அடுத்த படத்தை இயக்கும் தமிழ் இயக்குனர்!

கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் அடுத்த திரைப்படத்தை தமிழ் இயக்குனர் ஒருவர் இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கன்னட திரையுலகின் பல திரைப்படங்கள் தற்போது பான் - இந்தியா திரைப்படமாக வெற்றி பெற்று வருகின்றன என்பது குறிப்பாக ‘கேஜிஎப் மற்றும் காந்தாரா’ படங்கள் மிகப் பெரிய வெற்றியை பெற்றுள்ளன என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் நடிக்கவிருக்கும் அடுத்த திரைப்படத்தை தமிழ் இயக்குனர் இயக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் அடுத்த படத்தை சுதீர் சந்திரா பிலிம் கம்பெனி என்ற நிறுவனம் தயாரிக்க உள்ளது. இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த படத்தை கார்த்திக் அத்வைத் என்பவர் இயக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் ஏற்கனவே தமிழில் ’பாயுமொளி நீ எனக்கு’ என்ற படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்க உள்ளதாகவும் இந்த படத்தில் நடிக்கும் மற்ற நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் ஏற்கனவே தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘ஜெயிலர்’ என்ற திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே. அதேபோல் தனுஷ் நடித்து வரும் ’கேப்டன் மில்லர்’ படத்திலும் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

More News

சந்தானம் நடித்த 'ஏஜண்ட் கண்ணாயிரம்' ரிலீஸ் தேதி அறிவிப்பு!

நடிகர் சந்தானம் நடித்த 'ஏஜண்ட் கண்ணாயிரம்'  என்ற திரைப்படம் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக இருக்கும் நிலையில் தற்போது அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி

சர்வதேச அளவில் 24 விருதுகளை வென்ற தமிழ் திரைப்படம்: 7 விருதுகளை வென்ற நடிகர் மோகணேஷ்!

இந்த உலகில் எல்லாவற்றையும் விட ஒரு உயிரின் மதிப்பே உயர்ந்தது மிக முக்கியமானது. ஒருவரின் உயிரை எடுக்கும் உரிமை யாருக்கும் இல்லை, இந்த கருத்தை மையமாக வைத்து, ஒரு மாறுபட்ட புது முயற்சியாக,

பொண்ணு தான நீயும், அறிவில்லையா? அசீம் ஆவேசமாக திட்டுவது யாரை?

பிக்பாஸ் வீட்டை பொருத்தவரை எப்பொழுதெல்லாம் பொம்மை டாஸ்க் வருகிறதோ அப்போதெல்லாம் போட்டியாளர்கள் மத்தியில் கடும் சண்டை ஏற்படும் என்பது தெரிந்ததே.

அசல் கோலார், பிக்பாஸ் வீட்டிற்கு வருவதற்கு முன்பே கோளாறுதானா? வைரல் வீடியோ

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான அசல் கோலார் பிக்பாஸ்  வீட்டில் உள்ள பெண் போட்டியாளர்களிடம் கடலை போட்டு வரும் நிலையில் கிட்டத்தட்ட சிங்கப்பூர் மாடல் அழகி

மகனுடன் சென்னையில் தீபாவளி கொண்டாடிய எமி ஜாக்சன்: என்ன காரணம்?

நடிகை எமி ஜாக்சன் இந்த ஆண்டு தீபாவளியை சென்னையில் கொண்டாடிய நிலையில் அதுகுறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.