கள்ளக்காதலியுடன் ஓட்டல் ரூமில் இருந்த நடிகர்.. கையும் களவுமாக பிடித்த நடிகரின் மனைவி..!

  • IndiaGlitz, [Thursday,June 13 2024]

பிரபல நடிகர் தனது கள்ளக்காதலியுடன் ஹோட்டல் ரூமில் இருந்ததை அவருடைய மனைவி நேரில் பார்த்ததை அடுத்து இரு தரப்புக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு தற்போது விவாகரத்து வரை சென்றுள்ளது.

கன்னட திரை உலகின் பிரபல நடிகர் யுவராஜ்குமார் என்பவர் ஸ்ரீதேவி என்பவரை கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்த நிலையில் இருவருக்கும் இடையே அவ்வப்போது சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதாகவும் கடந்த சில மாதங்களாக பிரிந்து வாழ்ந்ததாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் நடிகர் தனது கள்ளக்காதலியுடன் ஹோட்டல் ரூமில் இருந்த நிலையில் அதை கேள்விப்பட்ட அவருடைய மனைவி ஸ்ரீதேவி நேராக ஓட்டல் அறைக்கு சென்று அவர்களை கையும் களவுமாக பிடித்ததை அடுத்து இரு தரப்பின் இடையே பிரச்சனை விவாகரத்து வரை சென்று உள்ளது.

யுவராஜ்க்கும் நடிகை ஒருவருக்கும் தகாத உறவு இருப்பதை தான் நேரில் பார்த்ததாகவும் அதனால் தன்னை தனது கணவர் அடித்து துன்புறுத்தியதாகவும் ஸ்ரீதேவி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.

அதேபோல் யுவராஜ்குமார் தனது வங்கி கணக்கிலிருந்து முறைகேடாக ஸ்ரீதேவி தன்னுடைய கணக்கிற்கு பணத்தை மாற்றி தனக்கு தெரியாமல் சொத்துக்களை வாங்கி குவித்துள்ளதாகவும், தன்னை மனரீதியாக தன்னுடைய மனைவி துன்புறுத்தியதாகவும் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். இது குறித்த வழக்கு தற்போது நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.