பிரபல நடிகர் மறைவு: ரஜினிகாந்த் இரங்கல்

  • IndiaGlitz, [Sunday,November 25 2018]

பிரபல கன்னட நடிகரும் முன்னாள் அமைச்சருமான அம்பரிஷ் நேற்று காலமானார். அவருக்கு வயது 66. கடந்த சில நாட்களாக உடல்நலமின்றி இருந்து நடிகர் அம்ரிஷ் நேற்று சிகிச்சையின் பலனின்றி காலமானதாக அறிவிக்கப்பட்டது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் நெருங்கிய நண்பரக்ளில் ஒருவராகிய அம்பரிஷ், கன்னட திரையுலகில் ரிபெல் ஸ்டார் என்று அழைக்கப்பட்டார். நடிகை சுமலதா இவரது மனைவி என்பதும் இவர்களுக்கு அபிஷேக் என்ற மகன் இருக்கின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கடந்த 1952ஆம் ஆண்டு மே 29ஆம் தேதி மாண்டியா மாவட்டத்தில் பிறந்த அம்பரீஷ், 1972ஆம் ஆண்டு கன்னட திரையுலகில் நுழைந்து பல வெற்றி படங்களில் நடித்தார். சுமார் 200 படங்கள் நடித்துள்ள அம்பரீஷ், மாநில அரசு விருதுகள் உள்பட பல விருதுகளை பெற்றுள்ளார். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அம்பரீஷ், சித்தராமையா மந்திரிசபையில் கேபினட் மந்திரியாக பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அம்பரீஷின் மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது: 'நல்ல மனிதநேயமுள்ளவர், எனது நெருங்கிய நண்பர் அம்பரீஷ் அவர்களை நான் இழந்து விட்டேன். அவரது ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்' என்று தெரிவித்துள்ளார்.

More News

உலக மகளிர் குத்துச்சண்டை: சாம்பியன் பட்டம் பெற்று மேரிகோம் சாதனை

கடந்த சில நாட்களாக டெல்லியில் உலக மகளிர் குத்துச்சண்டை போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை மேரிகோம்

'திமிரு பிடிச்சவன்' பாணியில் திருவண்ணாமலையில் செயல்பட்ட போலீசார்

விஜய் ஆண்டனி நடித்த 'திமிரு பிடிச்சவன்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களுடன் திரையரங்குகளில் ஓடி வருகிறது.

'ஆயிரத்துள் ஒருவன் 2' எப்போது? செல்வராகவனின் பதில்

செல்வராகவன் இயக்கத்தில் கார்த்தி, ரீமாசென், ஆண்ட்ரியா, பார்த்திபன் நடிப்பில் ஜிவி பிரகாஷ் இசையில் கடந்த 2010ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'ஆயிரத்தில் ஒருவன்'

ரஜினியின் '2.0' படம் குறித்து சிவகார்த்திகேயன்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த '2.0; திரைப்படம் வரும் வியாழன் அன்று வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தின் புரமோஷன் உலகம் முழுவதும் பிரமாண்டமாக நடந்து வருகிறது

ரஜினி, விஜய் நிவாரண உதவி குறித்து கருத்து கூறிய கமல்ஹாசன்

நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் பிரபல செய்தி தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்து பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்.