கார்த்தி மட்டும் இதை செய்தால் நான் சினிமாவை விட்டே போகிறேன்: கஞ்சா கருப்பு..!

  • IndiaGlitz, [Saturday,December 02 2023]

கார்த்தி மட்டும் 'பருத்திவீரன்’ போன்ற இன்னொரு படத்தில் நடித்து விட்டால் நான் சினிமாவில் விட்டே போகிறேன் என்று நடிகர் கஞ்சா கருப்பு தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

'பருத்திவீரன்’ திரைப்பட விவகாரம் கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில், இயக்குனர் அமீருக்கு ஆதரவாக திரையுலகினர் பலர் ஆதரவு குரல் கொடுத்து வருகின்றனர். ஆனால் கார்த்தி மற்றும் ஞானவேல் ராஜாவுக்கு ஆதரவாக இன்னும் ஒருவர் கூட குரல் கொடுக்கவில்லை

இந்த நிலையில் 'பருத்திவீரன்’ திரைப்படத்தில் நடித்த கஞ்சா கருப்பு அமீருக்கு ஆதரவாக பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அமீரின் நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்கள் தான் அந்த படத்தை முடிக்க பணம் கொடுத்து உதவினார்கள் என்றும் அமீர் எப்படி பொய் கணக்கு காட்டுவார் என்றும் ஒரு இஸ்லாமியர் எப்படி பொய் சொல்வார் என்றும் தெரிவித்தார்.

ரம்ஜான் நோன்பு காலத்தில் கூட அமீர் படப்பிடிப்பில் இருந்தார் என்றும் கார்த்தி மற்றும் சூர்யா இந்த பிரச்சனையை பேசி முடித்திருக்கலாம் என்றும் தெரிவித்தார்.

மேலும் அமீர் எப்போதும் என்னை விட்டுக் கொடுக்க மாட்டார் என்றும் நான் அவருடைய கால் செருப்பாக தான் இன்றைக்கும் இருந்து வருகிறேன் என்று கூறிய அவர், பருத்திவீரன் படத்தை பெரிய படமாக மாற்றியதால் தான் கார்த்தி இன்று பெரிய நிலையில் உள்ளார் என்றும் கார்த்தி மட்டும் இதே மாதிரி ஒரு படம் பண்ணிவிட்டால் நான் சினிமாவை விட்டு போகிறேன்’ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

More News

நடிப்பு மட்டுமல்ல.. கதையும் அவர் தான்.. மித்ரன் ஜவஹர் படத்தின் புதிய தகவல்..!

தனுஷ் நடித்த 'திருச்சிற்றம்பலம்' படத்தின் வெற்றியை அடுத்து இயக்குனர் மித்ரன் ஜவஹர் மாதவன் நடித்து வரும் படத்தை இயக்கி வருவதாகவும், இந்த படத்தின் படப்பிடிப்பு  லண்டன் மற்றும் சுற்றுப்புறங்களில் நடந்து

மாஸ் காட்சிகள்.. மிரட்டும் மேக்கிங்.. பிரபாஸின் 'சலார்' ட்ரெய்லர்..!

பிரபாஸ் நடித்த 'சலார்' திரைப்படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகி உள்ள நிலையில் டிரைலர் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

'ஒரு நாய் போட்டோவை கூட நிம்மதியா போட விட மாட்றாங்க..' பிரதீப் அந்தோணியின் பதிவு..!

பிக் பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான பிரதீப் அந்தோணி தனது சமூக வலைத்தள பக்கத்தில் நாய் புகைப்படத்தை பதிவு செய்த நிலையில் அந்த பதிவுக்கு  கிடைத்த கமெண்ட்ஸ்களை பார்த்து'

ஏன் இந்த சோதனை.. உங்கள் மன்சூர் அலிகான் அழுகிறேன்.. உருக்கமாக வெளியிட்ட அறிக்கை..!

அண்ணே! தாங்களுக்கு ஏன் இந்த சோதனை.? உங்கள் மன்சூர் அலிகான் அழுகிறேன் என நடிகர் மன்சூர் அலிகான் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

சிம்பு ரேஞ்சுக்கு பேசுறீங்க.. அந்த அளவுக்கு இன்னும் போகல.. அசோக்செல்வனின் 'சபாநாயகன்' டிரைலர்..!

அசோக் செல்வன் நடிப்பில் உருவான 'சபாநாயகன்' என்ற படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் வீடியோ சற்றுமுன் வெளியாகி இணையத்தில்