பலருக்கும் பசியாற்ற உதவியாக கஞ்சா கருப்பு பரிசளித்த ஆட்டோ..!

  • IndiaGlitz, [Thursday,December 14 2017]

பிரபல நகைச்சுவை நடிகர் கஞ்சாகருப்பு, பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் ரசிகர்களின் மனதை கவர்ந்த நிலையில் தற்போது அவரது மனிதாபிமான செயல் ஒன்று வெளிவந்து அவருடைய மதிப்பை உயர்த்தியுள்ளது. அவர் எந்தவித விளம்பரமும் இல்லாமல் பல உதவிகளை செய்து வருபவர் என்பது அவருக்கு நெருக்கமானவரகளுக்கு தெரிந்ததே. அப்படித்தான் சமீபத்தில் தனது நண்பரும் கவிஞரும், ‘கவிஞர் கிச்சன்’ என்கிற ஹோட்டல் நடத்தி வருபவருமான ஜெயங்கொண்டானின் உணவகத்துக்கு, ஒரு 'ஆட்டோ'வை அன்பளிப்பாக அளித்துள்ளார்.. அதன் பின்னணியில் நெகிழ்வான ஒரு காரணமும் உண்டு.

திருட்டு விசிடியில் படம் பார்க்காமல், காசுகொடுத்து டிக்கெட் எடுத்து தியேட்டரில் படம் பார்த்துவிட்டு வருபவர்களுக்கு பில் தொகையில் 10ரூ சலுகை, உதவி இயக்குனர்களுக்கு பாதிவிலையில் சாப்பாடு, வெளியூரில் இருந்து சினிமாவே கதியென தஞ்சம் பிழைக்க வந்து கையில் காசில்லாமல் வருவோருக்கு கூட பல சமயங்களில் இலவச சாப்பாடு என சேவை மனப்பான்மை கலந்து இந்த கவிஞர் கிச்சன் செயல்பட்டு வருகிறது.

இந்த ஹோட்டலுக்கு தேவையான காய்கறிகளை தினசரி கோயம்பேடு மார்க்கெட் சென்று காய்கறி வாங்கி வருவதற்காக வாடகை வாகனத்தை பயன்படுத்தி வந்தனர். இந்தநிலையில் இதற்கு தன்னால் முடிந்த ஒரு உதவியை செய்யவேண்டும் என நினைத்த நடிகர் கஞ்சா கருப்பு, இந்த ஹோட்டலுக்காக சொந்தமாகவே ஒரு 'ஆட்டோ' வாங்கி அன்பளிப்பாக தந்துள்ளார். இனி மிச்சமாகும் அந்த வாடகைப்பணம் இன்னும் பலரின் பசியாற்ற உதவும் அல்லவா..?

கஞ்சா கருப்புவின் இந்த நல்ல மனசுக்கு ஏற்றபடி அவரது சினிமா கேரியரும் மீண்டும் சூடுபிடிக்க துவங்கியுள்ளது. ஆம்.. தற்போது ‘சிலந்தி’ ஆதிராஜன் இயக்கிவரும் ‘அருவா சண்டை’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் கஞ்சா கருப்பு. 7 மணி படப்பிடிப்புக்கு 6 மணிக்கே தயாராக வந்து நின்ற கஞ்சா கருப்புவின் பங்சுவாலிட்டியை பார்த்து யூனிட்டே மிரண்டதாம்.. இந்தப்படத்தில் இவரது நகைச்சுவை காட்சிகள் சிறப்பாக வந்துள்ளது என படக்குழுவினர் பாராட்டி வருகின்றனர்.

இதுதவிர தற்போது லிங்குசாமி-விஷால் கூட்டணியில் உருவாகி வரும் ‘சண்டகோழி-2’ படத்தின் படப்பிடிப்பில் கிட்டத்தட்ட 20 நாட்களாக கலந்துகொண்டு நடித்து வருகிறார் கஞ்சா கருப்பு. மேலும் தனது நடிப்பில், வரும் டிச-15ஆம் தேதி வெளியாக இருக்கும் ‘பள்ளிப்பருவத்திலே’ படம் தனக்கு ஒரு திருப்புமுனையாக இருக்கும் என உறுதியாக நம்புகிறார் கஞ்சா கருப்பு.

 

More News

ஜெயம் ரவியின் அடுத்த பட டைட்டில் அறிவிப்பு

ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள 'டிக் டிக் டிக்' திரைப்படம் வெகுவிரைவில் திரைக்கு வரவுள்ள நிலையில் அவர் அடுத்ததாக ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 'சங்கமித்ரா' படத்திற்கு விரைவில் தயாராகிறார்.

தீரன் பட பாணியில் ராஜஸ்தானில் கொலை செய்யப்பட்ட சென்னை காவல் ஆய்வாளர்

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சென்னை கொளத்தூரில் உள்ள நகைக்கடையில் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் கொள்ளையடித்தனர். இந்த கொள்ளை சம்பவம் குறித்து துப்பு துலக்கிய மதுரவாயில் போலீசார்,

பாலா-துருவ் படத்தின் படப்பிடிப்பு எப்போது?

சீயான் விக்ரம் மகன் துருவ், தெலுங்கில் சூப்பர் ஹிட் ஆன 'அர்ஜூன்ரெட்டி' படத்தின் ரீமேக்கில் அறிமுகமாகிறார் என்பதும் இந்த படத்தை தேசிய விருது பெற்ற இயக்குனர் பாலா இயக்கவுள்ளார் என்பதும் தெரிந்ததே

உதயநிதியின் அடுத்தபடம் குறித்த அறிவிப்பு

இளையதலைமுறை நடிகர்களில் ஒருவராகிய உதயநிதி ஸ்டாலின் நடித்த 'இப்படை வெல்லும்' சமீபத்தில் வெளியாகிய நிலையில் அவர் தற்போது 'நிமிர்' என்ற படத்தில் நடித்து வருகிறார்.

அமெரிக்க நேரப்படி ரஜினிக்கு வாழ்த்து கூறிய கமல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் பிறந்த நாளையொட்டி நேற்று அவரது ரசிகர்களும், ஒட்டுமொத்த இந்திய திரையுலகமும், அரசியல்வாதிகளும், ரஜினிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர்.