ஜெயலலிதா நினைவிடத்தில் 'தலைவி' மரியாதை: வைரல் புகைப்படங்கள்!

  • IndiaGlitz, [Saturday,September 04 2021]

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு உருவாகியிருக்கும் திரைப்படம் ‘தலைவி’. பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் ஜெயலலிதாவின் கேரக்டரில் நடித்துள்ளார் என்பதும், எம்ஜிஆர் கேரக்டரில் அரவிந்த்சாமி நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை பிரபல இயக்குனர் விஜய் இயக்கியுள்ளார். ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகியுள்ள இந்த படம் வரும் 10ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி இன்று சென்னையில் நடைபெற உள்ளதை அடுத்து சற்று முன்னர் கங்கனா ரனாவத் சென்னை வந்தார். அவர் நேரடியாக சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா சமாதிக்கு சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். மேலும் அருகில் இருந்த எம்ஜிஆர் சமாதி மற்றும் கருணாநிதி சமாதி ஆகியவற்றுக்கும் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார் என்பதும் அவருடன் இயக்குனர் விஜய் உள்பட படக்குழுவினர்களும் இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

ஜெயலலிதா கேரக்டரில் நடித்தது மட்டுமின்றி ஜெயலலிதா சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்திய கங்கனாவை திரையுலகினர் ஆச்சரியமாக பார்த்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

மீண்டும் இணையும் 'மின்சார கனவு' கூட்டணி: இயக்குனர் இவரா?

கடந்த 1997ஆம் ஆண்டு பிரபுதேவா, அரவிந்த் சாமி நடிப்பில் ராஜீவ் மேனன் இயக்கத்தில் இளையராஜா இசையில் உருவான திரைப்படம் 'மின்சாரகனவு

மாலத்தீவில் 'பீச் பேபி' சன்னிலியோன்: வைரல் வீடியோ

தமிழ் திரையுலக நடிகைகள் உள்பட இந்திய திரை உலகில் உள்ள பல நடிகைகள் அவ்வப்போது மாலத்தீவு சென்று வருகின்றனர் என்பதும் மாலத்தீவின் இயற்கை எழில் கொஞ்சும் கடல் பகுதியையும்

சூர்யாவின் 'எதற்கும் துணிந்தவன்' படத்தில் இணைந்த விஜய் பட இயக்குனர்!

சூர்யா நடிப்பில், பாண்டிராஜ் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகிவரும் 'எதற்கும் துணிந்தவன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு 51 நாட்களாக காரைக்குடியில் நடைபெற்றது

ஷாருக்கான் - அட்லி படத்தில் இணைந்த மேலும் ஒரு தமிழ் பிரபலம்!

பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிக்க இருக்கும் திரைப்படத்தை அட்லி இயக்க உள்ளார் என்பதும் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சூர்யாவின் 'எதற்கும் துணிந்தவன்' படத்தில் சரண் சக்தியின் கேரக்டர் இதுதானா?

வடசென்னை, நெற்றிக்கண் உள்பட ஒருசில படங்களில் நடித்த சரண் சக்தி, சூர்யாவின் 'எதற்கும் துணிந்தவன்' படத்தில் இணைந்து உள்ளார் என்பதும் இவர் இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார்