போதையில் இருந்து மீண்டது எப்படி? 'தலைவி' பட நாயகி பேட்டி

  • IndiaGlitz, [Wednesday,April 01 2020]

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான ’தலைவி’ படத்தில் ஜெயலலிதா கேரக்டரில் நடித்து வரும் நடிகை கங்கனா ரணாவத், தான் சிறுவயதில் போதைக்கு அடிமையாக இருந்ததாகவும் அதன்பின்னர் போதையிலிருந்து மீண்டதாகவும் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:

நான் டீன் ஏஜ் வயதில் இருக்கும்போது வீட்டைவிட்டு ஓடிவந்து அதன்பின் சினிமாவில் நடித்தேன். அப்போது எனக்கு போதை பழக்கம் ஏற்பட்டது. ஒன்றரை ஆண்டு முதல் இரண்டு ஆண்டுகள் வரை போதைக்கு அடிமையாக நான் இருந்தது தான் சோதனையான கட்டம்

அப்போது என்னை போதை பழக்கத்தில் இருந்து காப்பாற்ற சிலர் முயற்சித்தனர். கடைசியில் ஒரு நல்ல நண்பர் எனக்கு யோகாவை கற்று கொடுத்தார். ராஜயோகா புத்தகம் ஒன்றையும் வழங்கினார். சுவாமி விவேகானந்தரை குருவாக ஏற்று என்னை வளர்த்துக்கொண்டேன்.

எனது வாழ்க்கையில் அந்த சவாலான நேரங்கள் வராமல் இருந்திருந்தால் கூட்டத்தோடு காணாமல் போய் இருப்பேன். எனக்கு மன உறுதியும், திறமையும் உருவாக ஆன்மிகம் வழிகாட்டியது. மோசமான நேரங்கள்தான் உண்மையில் நல்ல நேரங்கள்”. இவ்வாறு வீடியோ ஒன்றில் கங்கனா ரானாவத் கூறியுள்ளார்.

More News

கொரோனா பரவல்; உடலுறவு கொள்வது பாதுகாப்பனதா??? மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள்???

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் கடும் பாதிப்புகளை ஏற்படுத்திவரும் நிலையில் பலநாடுகளில் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது

பாடி பாலத்தில் கடுமையான டிராபிக்: திருந்தாத சென்னை மக்கள்

கொரோனா வைரஸ் தீவிரமாக பரவுவதை அடுத்து 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு என மத்திய அரசு சமீபத்தில் அறிவித்ததை அடுத்து சென்னையில் உள்ள பொதுமக்கள் பெரும்பாலானோர்

ஈஷாவில் ஒருவருக்கு கூட கொரோனா தொற்று இல்லை: ஈஷா மையம் விளக்கம் 

டெல்லியில் மத வழிபாட்டில் கலந்துகொண்டு தமிழகம் திரும்பியவர்களில் பெரும்பாலானோருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் கடலில் சிக்கித் தவிக்கும் 10 கப்பல்கள்!!! நிலைமை என்ன???

கொரோனா பரவலைத் தடுக்க அமெரிக்கா கடந்த மாதத்திலேயே கப்பல் நிறுத்தத்துக்கு அனுமதி மறுத்து விட்ட நிலையில் தற்போது அப்பகுதியில் 10 கப்பல்கள்

கொரோனா வார்டில் சிகிச்சை பெற்ற பெண் உயிரிழப்பு: கடலூரில் பரபரப்பு

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸின் பாதிப்பு மிக அதிகமாக இருந்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 57 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதை