ஒரு நடிகை இதைச் செய்யக்கூடாதா? புது அவதாரம் எடுத்த நடிகை கங்கனா ரனாவத் கேள்வி?

  • IndiaGlitz, [Tuesday,June 20 2023]

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்துவரும் நடிகை கங்கனா ரனாவத் ஏற்கனவே இயக்குநர் அவதாரத்தை எடுத்த நிலையில் தற்போது தயாரிப்பாளராக மாறியுள்ளார். இதையடுத்து நடிகர்கள் இதைச் செய்யும்போது இயல்பாகத் தெரிகிறது. ஆனால் ஒரு நடிகை, தாயாரிப்பாளர் ஆனால் புதுமையாகப் பார்க்கிறார்கள் என அவர் குற்றம் சாட்டியிருப்பது இணையத்தில் பேசு பொருளாகி இருக்கிறது.

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருந்துவரும் நடிகை கங்கனா பல ஹிட் திரைப்படங்களில் நடித்து முன்னணி இடத்தை பிடித்த நிலையில் லட்சுமிபாய்யின் வரலாற்று திரைப்படமான ‘மணிகர்னிகா தி குயின் ஆஃப் ஜான்சி‘ திரைப்படத்தில் நடித்து வந்தார். இடையிலேயே இந்தப் படத்தின் இயக்குநர் விலகியதைத் தொடர்ந்து அதைத் தானே இயக்கி நடித்து வெளியிட்டார். இதனால் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தமிழில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படமான ‘தலைவி’ திரைப்படத்தில் நடித்திருந்தார். இதனால் இந்தியா முழுக்கவே வரவேற்பு பெற்ற நிலையில் தற்போது மறைந்த பிரதமர் இந்திராகாந்தியின் எமெர்ஜென்சி காலக்கட்டத்தை காட்சிப்படுத்தும் ‘எமெர்ஜென்சி’ திரைப்படத்தை இயக்கியும் தயாரித்தும் வருகிறார்.

மேலும் மணிகர்னிகா திரைப்படத்திற்கு பிறகு நடிகை கங்கனா ‘மணிகர்னிகா ஃபிலிம்ஸ்‘ என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் துவங்கி இருந்தார். இந்த நிறுவனத்தின் சார்பாக தற்போது ‘டிக்கு வெட்ஸ் ஷெரு’ திரைப்படம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. நடிகை கங்கனா, இர்ஃபான் கான், நவாசுதீன் சித்திக், அவ்னீத் கவுடா போன்றோர் நடித்துள்ள இந்தத் திரைப்படம் ரொமாண்டிக் மற்றும் காமெடி கலந்த திரைப்படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

வரும் ஜுன் 23 ஆம் தேதி ஜியோ சினிமாவில் வெளியாக இருக்கும் ‘டிக்கு வெட்ஸ் ஷெரு’ திரைப்படத்தை சாய்கபீர் இயக்க அதை நடிகை கங்கனா ரனாவத் தயாரித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இயக்குநர் சாய் கபீர் ஏற்கனவே கங்கனா நடித்திருந்த ‘ரிவால்வர் ராணி‘ திரைப்படத்தை இயக்கி இருந்தார். இதனால் திரைக்கதை, இசை போன்ற பிரிவில் இயக்குநருடன் இணைந்து பணியாற்றியதாகவும் நடிகை கங்கனா குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் முதல் முறையாக டிக்கு வெட்ஸ் ஷெரு’ திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளர் ஆகியிருக்கும் நடிகை கங்கனா ரனாவத் பாலிவுட்டில் ஷாருக்கான், அஜய் தேவ்கன், அக்ஷய் குமார் போன்ற நடிகர்கள் தாங்கள் நடிக்கும் திரைப்படங்களை தாங்களே தயாரித்து வெளியிடுகின்றனர்.

ஆனால் ஒரு நடிகை இப்படி தயாரிப்பாளர் ஆனால் புதுமையாகப் பார்க்கிறார்கள். பெரும்பாலான இயக்குநர்கள் அவர்களுடன் இணைந்து வேலைப் பார்க்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். ஆனால் நான் என்னுடன் ஒத்துழைப்பவர்களுடன் மட்டுமே பணியாற்றுவதை தேர்வு செய்கிறேன் என்று கூறியுள்ளார்.

நடிகை கங்கனா ஏற்கனவே மணிக்கர்னிக்கா போன்று தான் நடிக்கும் பெரும்பாலான திரைப்படங்களின் திரைக்கதையில் தலையீடு செய்வதாக ஏற்கனவே பாலிவுட் வட்டாரத்தில் குற்றம் சாட்டப்பட்டு வந்தது. இந்நிலையில் தயாரிப்பாளர் அவதாரத்தை எடுத்திருக்கும் நடிகை கங்கனா ஏன் புதுமையாக பார்க்கிறீர்கள்? என்று கேள்வி எழுப்பி இருப்பது பாலிவுட் வட்டாரத்தில் பேசு பொருளாகி இருக்கிறது.