அரசியல் தான் முக்கியம்.. இந்திரா காந்தி படத்தை கிடப்பில் போட்ட கங்கனா ரனாவத்..!

  • IndiaGlitz, [Friday,May 17 2024]

பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடித்த ’எமர்ஜென்சி’ என்ற திரைப்படம் ஜூன் 14ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அரசியல் பணிகளில் அவர் பிஸியாக இருப்பதால் இந்த படத்தின் ரிலீஸ் தேதியை ஒத்தி வைத்து விட்டதாக கூறப்படுகிறது.

பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான கங்கனா ரனாவத் நடித்து இயக்கி வந்த திரைப்படம் ’எமர்ஜென்சி’. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி வாழ்க்கை வரலாற்றின் ஒரு பகுதியே இந்த படமாக உருவாகியுள்ள நிலையில் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்தது.

இந்த நிலையில் இந்த படத்தை ஜூன் 14ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருந்த நிலையில் தற்போது கங்கனா ரனாவத் தனது சொந்த மாநிலமான இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள மண்டி என்ற தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் போட்டியிடுகிறார்.

தேர்தல் பிரச்சாரத்தில் பிஸியாக இருந்ததால் ’எமர்ஜென்சி’ படத்தின் தொழில்நுட்ப பணிகளை அவரால் கவனிக்க முடியவில்லை என்றும் அதனால் திட்டமிட்டபடி ஜூன் 14-ஆம் தேதி ரிலீஸ் ஆகவில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தற்போதைய நிலையில் அரசியலுக்காக அவர் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டதால் கொண்டதாகவும் நாட்டிற்கான பணியே முதன்மையானது என்பதால் அதை முடித்து விட்டு அதன் பிறகு ’எமர்ஜென்சி’ படத்தில் கவனம் செலுத்துவார் என்று ‘எமர்ஜென்சி’ படத்தின் தயாரிப்பு நிறுவனம் இன்ஸ்டாவில் கூறியுள்ளது. மேலும் ’எமர்ஜென்சி’ படத்தின் புதிய ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

More News

வெள்ளித்திரைக்கு வந்த 'சிறகடிக்க ஆசை' நடிகை..  டைட்டில் மற்றும் பூஜை புகைப்படங்கள்..!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'சிறகடிக்க ஆசை' சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் இந்த சீரியலில் அண்ணாமலை - விஜயா,  முத்து - மீனா, மனோஜ் - ரோகிணி மற்றும் ரவி

மீண்டும் பாலிவுட் செல்லும் அனிருத்.. இன்னொரு ரூ.1000 கோடி வசூல் படமா?

ஷாருக்கான் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவான 'ஜவான்' திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்த நிலையில் இந்த படம் உலகம் முழுவதும் ரூ.1000 கோடிக்கும் அதிகமாக வசூல்

எம்ஜிஆர் படத்திற்கும் பாடல் எழுதிவிட்டேன்.. ஆனாலும் ஒரு மனக்குறை.. வைரமுத்து

கவியரசு வைரமுத்து, எம்ஜிஆர் படத்திற்கு பாடல் எழுதவில்லை என்ற கலைக்குறை தனக்கு இருந்ததாகவும் ஆனால் அந்த குறை தற்போது தொழில்நுட்ப மூலம் தீர்ந்துவிட்டது என்றும் தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார்.

பீச்சில் காற்று வாங்க போன நயன்தாரா.. கமெண்ட்களில் கவிதை இயற்றும் ரசிகர்கள்..!

இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் கைகோர்த்தபடி பீச்சில் நயன்தாரா காற்று வாங்கியபடி நடக்கும் புகைப்படம் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கவிதை

சிம்பு பிரச்சனை முடிந்தது.. ரஜினியும் உள்ளே வந்துவிட்டார்.. தயாரிப்பாளர் ஐசரி கணேஷ்..!

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் 'தக்லைஃப்' திரைப்படத்தில் நடிகர் சிம்பு முக்கிய வேடத்தில் நடிப்பதாக சமீபத்தில் படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்